2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு | ஜூன் ஜூலையில் பள்ளிகள் வேண்டாம் ; மலையாள இயக்குனர்கள் அரசுக்கு கோரிக்கை | மோகன்லாலும் மம்முட்டியும் கண்டுகொள்ளவில்லை ; பன்னீர் புஷ்பங்கள் சாந்தி கிருஷ்ணா வருத்தம் | ‛ஜனநாயகன்' படத்தில் நரேன் நடிக்கும் வேடம் இதுதான் | ‛கிச்சா' என்கிற பெயர் தன்னுடன் ஒட்டிக்கொண்டது எப்படி ? சுதீப் புதிய தகவல் | 'தீ' ரஜினியை ரி-க்ரியேட் செய்துள்ளாரா லோகேஷ்? |
தமிழ் சின்னத்திரையின் வளர்ந்து வரும் நடிகையான ரேஷ்மா முரளிதரன், ஜீ தமிழில் ஒளிபரப்பான ‛பூவே பூச்சூடவா' தொடரின் மூலம் அறிமுகமானார். அதில் அவருடன் நடித்த சக நடிகரான மதன் பாண்டியன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ‛பூவே பூச்சூடவா' முடிந்த கையோடு இருவரும் கலர்ஸ் தமிழில் ‛அபி டெய்லர்' என்ற சீரியலில் ஜோடியாக சேர்ந்து நடித்து வருகின்றனர். அபி டெய்லர் தொடரும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், ஜீ தமிழின் ‛பூவே பூச்சூடவா' குழு புதிய சீரியல் ஒன்றை தயாரிக்க உள்ளது. இதில் ரேஷ்மா தான் ஹீரோயினாக நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில் புதிய தொடரிலும் ரேஷ்மா - மதன் ஜோடியாக நடிப்பார்களா? இல்லை புது கணவரை பிரிந்து ரேஷ்மா மட்டும் தனியாக நடிக்கிறாரா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ரேஷ்மா நடிக்கும் புதிய தொடர் குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.