படுகவர்ச்சியாக புகைப்படம் வெளியிட்ட ஜெனிபர் | ஜுனியர் என்டிஆருக்கு வாழ்த்து சொன்ன பவன் கல்யாண் | தெலுங்கு பட ஷூட்டிங்கில் ரச்சிதா மகாலெட்சுமி | 'சத்யா' காட்சியைப் பகிர்ந்து கவியூர் பொன்னம்மாவுக்கு கமல்ஹாசன் இரங்கல் | சுதா சந்திரன் பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் குழுவினர் | சீக்கிரமே அசைவம் சாப்பிடுவதை நிறுத்திவிடுவேன் - ராஜலெட்சுமி பேட்டி | 160 படங்களைக் கடந்த 2024 ரிலீஸ், 6 படங்கள் மட்டுமே 100 கோடி வசூல் | வித்தியாசமா கூவுறாங்க! மணிமேகலை வெளியிட்ட நறுக் வீடியோ | சீரியலிலும் அட்ஜெஸ்ட்மென்ட் இருக்கு - நிமிஷிகா பளீச் பேட்டி | சிம்பு நடிக்க இருந்த படத்தில் ரஜினியா? |
தமிழ் சின்னத்திரையின் வளர்ந்து வரும் நடிகையான ரேஷ்மா முரளிதரன், ஜீ தமிழில் ஒளிபரப்பான ‛பூவே பூச்சூடவா' தொடரின் மூலம் அறிமுகமானார். அதில் அவருடன் நடித்த சக நடிகரான மதன் பாண்டியன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ‛பூவே பூச்சூடவா' முடிந்த கையோடு இருவரும் கலர்ஸ் தமிழில் ‛அபி டெய்லர்' என்ற சீரியலில் ஜோடியாக சேர்ந்து நடித்து வருகின்றனர். அபி டெய்லர் தொடரும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், ஜீ தமிழின் ‛பூவே பூச்சூடவா' குழு புதிய சீரியல் ஒன்றை தயாரிக்க உள்ளது. இதில் ரேஷ்மா தான் ஹீரோயினாக நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில் புதிய தொடரிலும் ரேஷ்மா - மதன் ஜோடியாக நடிப்பார்களா? இல்லை புது கணவரை பிரிந்து ரேஷ்மா மட்டும் தனியாக நடிக்கிறாரா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ரேஷ்மா நடிக்கும் புதிய தொடர் குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.