ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
தமிழ் சின்னத்திரையின் வளர்ந்து வரும் நடிகையான ரேஷ்மா முரளிதரன், ஜீ தமிழில் ஒளிபரப்பான ‛பூவே பூச்சூடவா' தொடரின் மூலம் அறிமுகமானார். அதில் அவருடன் நடித்த சக நடிகரான மதன் பாண்டியன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ‛பூவே பூச்சூடவா' முடிந்த கையோடு இருவரும் கலர்ஸ் தமிழில் ‛அபி டெய்லர்' என்ற சீரியலில் ஜோடியாக சேர்ந்து நடித்து வருகின்றனர். அபி டெய்லர் தொடரும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், ஜீ தமிழின் ‛பூவே பூச்சூடவா' குழு புதிய சீரியல் ஒன்றை தயாரிக்க உள்ளது. இதில் ரேஷ்மா தான் ஹீரோயினாக நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில் புதிய தொடரிலும் ரேஷ்மா - மதன் ஜோடியாக நடிப்பார்களா? இல்லை புது கணவரை பிரிந்து ரேஷ்மா மட்டும் தனியாக நடிக்கிறாரா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ரேஷ்மா நடிக்கும் புதிய தொடர் குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.