மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கடைசி வாரம் வரை மிகவும் கடினமான போட்டியாளராக இருந்தார் ஜூலி. முந்தைய சீசனில் செய்த தவறை செய்யாமல், தான் இழந்த பெயரை மீண்டும் பெறுவதற்காக மக்களிடம் தன்னை நிரூபிப்பதற்காக விளையாடினார் ஜூலி. கடைசி வாரம் வரை வந்துவிட்டதால் கண்டிப்பாக இறுதிபோட்டியில் ஜூலி விளையாடுவார் என்றே அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், ஜூலி இரண்டாவது எவிக்ஷனில் அபிராமிக்கு அடுத்தப்படியாக வெளியேறிவிட்டார்.
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த ஜூலி, சமூக வலைதளத்தில் தனது முதல் பதிவை வெளியிட்டுள்ளார். அதில், 'வெற்றி என்பது இறுதியில் நாம் எதை பெற்றோம் என்பது அல்ல. வெற்றிக்கான பயணத்தில் நாம் யாராக இருந்தோம் என்பதே முக்கியம்' என பதிவிட்டிருந்தார். ஜூலியின் இந்த பாசிட்டிவான ஆட்டிட்யூட் பிக்பாஸ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ஜூலிக்கு ஆதரவாக பேசி வரும் பலரும் 'நீ மக்கள் மனதை வென்றுவிட்டாய். இது தான் உனது வெற்றி' என அவரை புகழ்ந்து வருகின்றனர்.