இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. ஏப்ரல் 9ம் தேதி பிக்பாஸ் அல்டிமேட்டின் இறுதி போட்டி நடைபெற்று, அதன் ஒளிபரப்பு ஏப்ரல் 10ம் தேதி நடைபெறும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இந்த வாரத்திற்கான எவிக்சன் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இதற்கிடையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் தாமரையை ஹவுஸ்மேட்கள் டார்கெட் செய்து வருகின்றனர். 'நானாக நானிருந்தேன்' என்ற டாஸ்க்கின் போது ரம்யா பாண்டியனும், அபிராமியும் 'தாமரைக்கு தனித்துவமும் இல்லை, நேர்மையும் இல்லை அவர் நடிக்கிறார்' என அவரது குறையை சுட்டிக்காட்டி பேசுகின்றனர். இதனால் மூன்று பேருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் நடைபெறுகிறது. அதில் முதல் சுற்றில் தாமரை வெளியேற்றப்படுவதால் அவர் கண்கலங்குகிறார். மேலும், வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவில், நிரூப், அபிராமி, ரம்யா ஆகிய மூவரும் விளையாடுகின்றனர். அதில் நிரூப், அபிராமி பாலாவின் பின்னாடியே செல்வதாக சொல்கிறார். இதனால் மனமுடைந்த அபிராமி கதறி அழுகிறார்.
இது ஒருபுறமிருக்க இதுவரை பதிவான வாக்குகள் அடிப்படையில் அபிராமி அல்லது ரம்யா இந்த வாரம் எவிக்சன் ஆகலாம் என கூறப்படுகிறது. அதேசமயம் ஹவுஸ்மேட்கள் தாமரையை டார்கெட் செய்து வெளியேற்றுவதில் குறியாக உள்ளனர் என்றும் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.