ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளரான சரண்யா துராடி, நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். ஆரம்பத்தில் சில சின்ன பட்ஜெட் படங்களில் நடித்து வந்தார். ஆனால், தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் சின்னத்திரைக்கு வந்தார். விஜய் டிவியின் 'நெஞ்சம் மறப்பதில்லை', 'ஆயுத எழுத்து', 'வைதேகி காத்திருந்தாள்' ஆகிய தொடர்களில் நடித்துள்ளார். இவர் நடிக்க ஆரம்பித்த புதிய தொடரான வைதேகி காத்திருந்தாள் ஆரம்பித்த வேகத்திலேயே முடித்து வைக்கப்பட்டது. மேலும், அவர் நடித்த அனைத்து சீரியல்களுமே வெவ்வேறு காரணங்களுக்காக விரைவிலேயே முடித்து வைக்கப்பட்டது.
இந்நிலையில், சரண்யா தற்போது தொகுப்பாளினி அவதாரம் எடுத்து புது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளார். ஜீ தமிழில் ஒளிபரப்பாகவுள்ள ஆஹா கல்யாணம் என்ற நிகழ்ச்சியை வீஜே விஜய்யுடன் இணைந்து சரண்யா துராடி தொகுத்து வழங்கவுள்ளார். அதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
ஜீ தமிழின் முக்கிய சீரியல்களில் ஒன்றான செம்பருத்தி தொடரில் முதலில் பார்வதியாக நடிக்க வேண்டியவர் சரண்யா தான். ஆனால், விஜய் டிவி சீரியல் வாய்ப்பு கிடைத்தால் செம்பருத்தி வாய்ப்பை விட்டுவிட்டார். தற்போது ஜீ தமிழுக்கு வந்திருக்கும் சரண்யா மிக விரைவில் புதிய சீரியலில் கமிட்டாவார் என எதிர்பார்க்கப்படுகிறது.