இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
இயக்குனர் பாலா இயக்கத்தில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த 'சேது'. விக்ரமுக்கு அடுத்தபடியாக அந்த படத்தில் அனைவரும் புகழ்ந்த கதாபாத்திர தேர்வு 'அபிதா' தான். உண்மையில் இந்த கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்க தேர்வாகி இருந்தவர் பிரபல வில்லி நடிகை ஷில்பா தான். ஆனால், பாலா போட்ட கண்டிஷனால் ஹீரோயின் வாய்ப்பை தவற விட்டு விட்டார்.
இதுகுறித்து ஷில்பா அளித்துள்ள சமீபத்திய பேட்டியில், 'பாலா சார் ஆடிசனுக்கு தாவணி கட்டிட்டு வர சொன்னார். ஆடிசன் முடிந்தது பத்து நாள் கழித்து நீங்கள் படத்தில் நடிக்கிறீர்கள். படம் முடிய ஒரு வருடம் கூட ஆகலாம். ஆனால், அதுவரை நீங்கள் சீரியலில் நடிக்க கூடாது என்றார். எனக்கு அப்போது சீரியலில் அதிக வாய்ப்புகள் வந்தன. பல தொடர்களில் நடித்தேன். எனவே, சேது படத்தை மிஸ் பண்ணிவிட்டேன். ஆனால், இப்போதும் அது குறித்து எனக்கு கவலை எதுவும் இல்லை. ஏனெனில் சீரியலில் நான் பல வெரைட்டியான கேரக்டரில் தொடர்ந்து நடித்தேன்' என்று கூறியுள்ளார்.
சின்னத்திரையிலும், வெள்ளித்திரையிலும் ஏறக்குறைய ஒரே காலகட்டத்தில் அவருக்கு பல வாய்ப்புகள் கிடைத்த போதிலும், ஷில்பா சீரியல்களில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி வந்தார். இன்றளவும் தமிழ் சின்னத்திரையில் டாப் வில்லி நடிகைகளில் ஷில்பாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.