கூலி படத்தில் ரஜினி உடன் நடித்தது ஸ்பெஷலான அனுபவம் : பூஜா ஹெக்டே | அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா? : ரவி மோகன் கொடுத்த பதில் | விஜய் சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தே? | பாங்காக் பறந்த இட்லி கடை படக்குழு | 24 லட்சம் வாடகையில் புதிய அபார்ட்மென்ட்டுக்கு குடிபெயர்ந்த ஷாருக்கான் | உடை மாற்ற உதவிக்கு வருவேன் என அடம்பிடித்த போதை நடிகர் : மலையாள நடிகை அதிர்ச்சி தகவல் | ஜெய ஜெய ஜெய ஜெய ஹே ஹிந்தி ரீமேக்கை அமீர்கான் கைவிட்டது ஏன்? : நடிகர் புது தகவல் | மீரா ஜாஸ்மின் பெயர் என் காதுகளில் ஒலிக்காத நாளே இல்லை ; சிலாகித்த நயன்தாரா | கேரள முதல்வரின் சொந்த ஊர் கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் | கிடப்பில் இருக்கும் பிரபுதேவா படத்தை வெளியிட முயற்சி |
தமிழ் தொலைக்காட்சிகளில் மிகவும் பிரபலமான விஜே என்றால் அது ஆனந்த கண்ணன் தான். நிகழ்ச்சியை நேர்த்தியாகவும், இளைய தலைமுறைக்கு பிடித்த டிரெண்டிங்கிலும் தொகுத்து வழங்கி வந்தார். தொடர்ந்து பல சினிமா நிகழ்வுகள், ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கியுள்ளார். இதற்கிடையே அவருக்கு சினிமா வாய்ப்பு கிடைத்தது. ஆனால், சினிமா வாய்ப்பு ஆனந்த கண்ணனுக்கு தொடர்ந்து சொல்லிக்கொள்ளும்படி சிறப்பாக இல்லை. அதன்பிறகு மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் தமிழ் கிராமிய கலைகளை 'ஆனந்த கூத்து' என்ற அமைப்பின் மூலம் கற்றுக் கொடுத்து வந்தார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த ஆனந்த கண்ணன், கடந்த ஆகஸ்ட் 16 ஆம் தேதி தனது 48-வது வயதில் உயிரிழந்தார். இந்நிலையில், அவரது 49 வது பிறந்தநாள் அண்மையில் வந்தது. அன்று அவரது மனைவி ராணி கண்ணன், 'எங்கும் நிறைந்திருக்கும் என் அன்பனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்' என பதிவிட்டிருந்தார். முன்னதாக பிப்ரவரி 1 ஆம் தேதியும் 24-வது திருமண நாளை 'நீ விட்டு சென்ற காதலுடன் வாழ்கிறேன்' என பதிவிட்டிருந்தார். ராணி கண்ணனின் பதிவை பார்க்கும் ரசிகர்களும், நண்பர்களும் மிகவும் எமோஷனலாகி ஆனந்த கண்ணனை நினைத்து உருகி வருகின்றனர்.