எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
சின்னத்திரை நடிகர்களான விக்னேஷ் மற்றும் ஹரிப்ரியா, கனா காணும் காலங்கள் தொடரின் மூலம் அறிமுகமானார்கள். இவர்கள் இருவரும் கடந்த 2012ம் ஆண்டில் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் விக்னேஷூம் ஹரிப்ரியாவும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். இதற்கு வேறொரு தொலைக்காட்சியில் ஆன்கர் அசாருடன் ஹரிப்ரியா நெருக்கமாக பழகி வந்ததே காரணம் என புரளி கிளம்பியது. இதை ஹரிப்ரியா அப்போதே மறுத்து பதிவிட்டிருந்தார். அவர் வெளியிட்ட பதிவில் அசார் நல்ல நண்பர் என்ற வகையிலேயே குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், இந்த சம்பவங்கள் நடந்து பல நாட்கள் கழிந்த பின்னரும், மீண்டும் அதே அசார் - ஹரிப்ரியா உறவு சர்ச்சையும், ஹரிப்ரியா அளித்த விளக்கமும் புதிய செய்தி போல் மீண்டும் வலம் வருகிறது. மேலும், நடிகர் விக்னேஷ் விவாகரத்துக்கு பின் யூ-டியூப் சேனலுக்கு கொடுத்த இண்டர்வியூ வீடியோவும் வைரலாகி வருகிறது. அதில், விக்னேஷ், 'காதேலே பண்ணக்கூடாது. காதல் வாழ்க்கையில் நேர்மையாக இருக்க வேண்டும். உண்மையாக இருக்க வேண்டும். இன்னும் எளிதாக சொல்ல வேண்டுமென்றால் உங்கள் மொபைல் போன் பேட்டர்ன் உங்க பார்டனருக்கும் அவங்களோட பேட்டர்ன் உங்களுக்கும் தெரிந்திருக்க வேண்டும்' என கூறுகிறார். இப்படியாக இரண்டு வருடத்திற்கு முன் நடந்த விவாகரத்து சர்ச்சை சோஷியல் மீடியாவை விடாமல் துரத்தி வருகிறது.