நான் நிஜமாகவே அதிர்ஷ்டசாலி : மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | முதன்முதலில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட படம் 'அஞ்சான்': இயக்குனர் லிங்குசாமி | கீர்த்தி சுரேஷ் வைத்த அன்பான கோரிக்கையை நிராகரித்த தனுஷ் | விஜய் ஆண்டனி இசையமைத்து பாடிய பூக்கி படத்தின் முதல் பாடல் வெளியானது! | தனுஷின் தேரே இஷ்க் மெயின் படத்தின் ப்ரீ புக்கிங் எவ்வளவு? | சூர்யா 46வது படம் 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறதா? | பிரதீப் ரங்கநாதனை புகழும் கிர்த்தி ஷெட்டி | டிரைலர் உட்பட ஜனநாயகன் படத்தின் அடுத்தடுத்த அப்டேட் | ரவி தேஜா உடன் இணைந்த பிரியா பவானி சங்கர் | 'பிசாசு 2' படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்தேனா?: ஆண்ட்ரியா விளக்கம் |

சின்னத்திரை நடிகர்களான விக்னேஷ் மற்றும் ஹரிப்ரியா, கனா காணும் காலங்கள் தொடரின் மூலம் அறிமுகமானார்கள். இவர்கள் இருவரும் கடந்த 2012ம் ஆண்டில் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் விக்னேஷூம் ஹரிப்ரியாவும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். இதற்கு வேறொரு தொலைக்காட்சியில் ஆன்கர் அசாருடன் ஹரிப்ரியா நெருக்கமாக பழகி வந்ததே காரணம் என புரளி கிளம்பியது. இதை ஹரிப்ரியா அப்போதே மறுத்து பதிவிட்டிருந்தார். அவர் வெளியிட்ட பதிவில் அசார் நல்ல நண்பர் என்ற வகையிலேயே குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், இந்த சம்பவங்கள் நடந்து பல நாட்கள் கழிந்த பின்னரும், மீண்டும் அதே அசார் - ஹரிப்ரியா உறவு சர்ச்சையும், ஹரிப்ரியா அளித்த விளக்கமும் புதிய செய்தி போல் மீண்டும் வலம் வருகிறது. மேலும், நடிகர் விக்னேஷ் விவாகரத்துக்கு பின் யூ-டியூப் சேனலுக்கு கொடுத்த இண்டர்வியூ வீடியோவும் வைரலாகி வருகிறது. அதில், விக்னேஷ், 'காதேலே பண்ணக்கூடாது. காதல் வாழ்க்கையில் நேர்மையாக இருக்க வேண்டும். உண்மையாக இருக்க வேண்டும். இன்னும் எளிதாக சொல்ல வேண்டுமென்றால் உங்கள் மொபைல் போன் பேட்டர்ன் உங்க பார்டனருக்கும் அவங்களோட பேட்டர்ன் உங்களுக்கும் தெரிந்திருக்க வேண்டும்' என கூறுகிறார். இப்படியாக இரண்டு வருடத்திற்கு முன் நடந்த விவாகரத்து சர்ச்சை சோஷியல் மீடியாவை விடாமல் துரத்தி வருகிறது.