துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 5-ல் கலந்து கொண்ட ராஜூ ஜெயமோகன் வெற்றி பெற்று டைட்டில் பட்டம் வென்றார். அதன்பின் சில தினங்கள் கழித்து சில பேட்டிகளில் பேசிய ராஜூ, இனி சீரியல்களில் நடிக்கப் போவதில்லை எனவும், சினிமாவில் கவனம் செலுத்தப் போவதாகவும் தெரிவித்திருந்தார்.
ஆனால், ராஜூக்கு சொல்லிக்கொள்ளும் வகையில் எந்த ஒரு சினிமா வாய்ப்பும் கிடைக்கவில்லை. இதற்கிடையில் ரசிகர்களும் ராஜூவை கத்தி கேரக்டரில் பார்க்க ஆர்வமாக இருந்தனர். இந்நிலையில் அவர், 'நாம் இருவர் நமக்கு இருவர் 2' தொடரில் மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாம் இருவர் நமக்கு இருவர் 2 தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் நல்ல நிலையில் சென்று கொண்டிருக்கிறது. இந்த தொடரில் கத்தி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் கலக்கி வந்த ராஜூ, பிக்பாஸ் வாய்ப்பினால் சீரியலை விட்டு விலகினார். ஆனால், அவர் நடித்து வந்த கதாபாத்திரத்திற்கு இதுவரை வேறு நடிகரை தேர்வு செய்யவில்லை.
தற்போது கதையில் ஐஸ்வர்யா திருமணத்தில் ஏராளமான ட்விஸ்டுகள் வரப்போவதாகவும், இறந்து போனதாக காட்டப்பட்ட முத்துராசு மீண்டும் வந்து ஐஸ்வர்யாவை மிரட்டும் வகையில் தொடரில் பல திருப்பங்கள் இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் முத்துராசு கதாபாத்திரத்துடன் கத்தியும் திரும்ப வருவார் என்றும் கத்தி கேரக்டரில் ராஜூ தான் தொடரப்போகிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.