த.வெ.க.,வில் இணைகிறாரா அர்ஜூன்? உண்மை என்ன? | திரையுலகில் 50 ஆண்டுகள்: பாக்யராஜ்க்கு பாராட்டு விழா | என்னது, ஸ்ருதிநாராயணன் படத்துக்கு தியேட்டர் கிடைக்கலையா? | பிளாஷ்பேக்: ஒரே படத்தின் கதையை இருவேறு காலங்களில் இயக்கிய இயக்குநர் | 'பென்ஸ்' படத்தில் இணையும் ஹரிஷ் கல்யாண், மூன்று நாயகிகள் | ஆண்கள் பார்வையில் வெளியான குடும்ப வன்முறை படம் ; கண் கலங்கிய நடிகர் பாலா | பாலகிருஷ்ணா பிறந்தநாளில் வெளியான ‛அகண்டா 2' அறிமுக டீசர் | தந்தையின் இறுதிச்சடங்கு.. ஸ்ட்ரெச்சரில் வந்த தாய் ; கதறியழுத வில்லன் நடிகர் | வெற்றிமாறனை சுற்றி வரும் வதந்திகள், பதில் சொல்வாரா ? | நயன்தாரா படத்தை தொடர்ந்து திலீப் படத்தை இயக்கும் வாரிசு நடிகர் |
விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஜீவா என்ற கதாபாத்திரத்தில் வெங்கட் நடித்து வருகிறார். இந்த தொடரில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தார் திறக்கவிருந்த புதிய மளிகை கடையை திறக்கவிடாமல் சிலர் சதி செய்கின்றனர். பல போராட்டங்களுக்கு மத்தியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரதர்ஸ் கடையை மீட்டு திறக்கின்றனர். இந்த சந்தோஷமான நிகழ்வை கொண்டாடும் விதத்தில் ஜீவா என்ற கதாபாத்திரம் மது அருந்துவதோடு, வீட்டில் சென்று ரகளை செய்கிறது. இந்த எபிசோடு செம காமெடியாக சென்றதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததுடன் அதில் நடித்த வெங்கட்டையும் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில், அந்த அளவுக்கு எதார்த்தமாக நடித்த வெங்கட்டை நீங்கள் உண்மையாகவே குடிச்சீங்களா? என பலரும் கேள்வி கேட்டு வந்தனர். அவர்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் அந்த காட்சி உருவாக்கப்பட்ட விதத்தை வீடியோவாக வெங்கட் வெளியிட்டுள்ளார். மேலும் அதில், நான் ஒரு டீ டோட்டலர். சைட் டிஸ் மட்டுமே சாப்பிடுவேன். அந்த காட்சிக்காக கண்களை தேய்த்து தேய்த்து நடித்தேன். இதனால் கண் வலி வந்தது. ஆனாலும், அது வொர்த் தான் என்று கூறியுள்ளார்.
இதனையடுத்து பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்கள் அனைவரும் வெங்கட்டின் நடிப்பை புகழ்ந்து பாராட்டி வருகின்றனர்.