கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி | புது சாதனை படைக்குமா 'கூலி' டிரைலர் | கல்லீரல் பிரச்னையால் அவதிப்படும் தனுஷ் பட நடிகர் : கேபிஒய் பாலா ஒரு லட்சம் உதவி |
விஜய் டிவியில் எதிர்பாராத திருப்பங்களுடன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது ராஜா ராணி 2. சந்தியாவின் கனவை நனவாக்க அவரது அண்ணன் சரவணனை உதவ சொல்லி சந்தியாவின் தந்தை கேட்டுக்கொள்கிறார். இதையடுத்து அண்ணன் தங்கை செண்டிமெண்ட் ட்ராக் புதிதாக வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு முன்னதாகவே அவரது அண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த சால்சா மணி சீரியலை விட்டு திடீரென விலகியுள்ளார்.
சால்சா மணி எதற்காக சீரியலை விட்டு விலகினார் என்பது குறித்து எந்தவொரு தகவலும் இல்லை. அதேசமயம் சால்சா மணி நடித்து வந்த கதாபாத்திரத்தில் இனி சித்தார்த் வெங்கடேஷ் நடிக்க உள்ளார். இவரும் நல்ல நடிகர் தான். தெய்வமகள் தொடரில் சுரேஷ் என்ற கதாபாத்திரத்திலும், மிஷ்கின் படங்களில் குறிப்பாக துப்பறிவாளன் படத்தில் சூப்பரான கேரக்டரிலும் நடித்து அசத்தியிருப்பார். சித்தார்த் வெங்கடேஷ் சரவணன் கதாபாத்திரத்தில் இணைந்திருப்பது இனி அந்த கதாபாத்திரம் அதிக முக்கியத்துவம் பெறும் என்ற எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.