15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை | ஆஸ்கர் லைப்ரரியில் இடம்பிடித்த தமிழர் படம் | பிளாஷ்பேக் : காரில் பயணம் செய்யாத நடிகை | பிளாஷ்பேக் : காப்பி மேல் காப்பி அடிக்கப்பட்ட படம் | கதாநாயகனாகத் தொடரும் சூரி, இடைவெளி விடும் சந்தானம்.. | நான் பெண்ணாக பிறந்திருந்தால் கமலை திருமணம் செய்திருப்பேன் : சிவராஜ்குமார் | ஜிங்குச்சா - கமல்ஹாசன், சிலம்பரசன் நடனத்தில்… முதல்பாடல் நாளை வெளியீடு |
தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் தனித்துவமான முறையில் கதை சொல்லி ரசிகர்களை ஈர்த்து வந்தது விஜய் டிவி. ஆனால், விஜய் டிவியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட புதிய தொடர் ஒன்று ஆரம்பித்த சில நாட்களிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரஜின், சரண்யா துராடி, லதா, நிரோஷா, விக்னேஷ் என நடிகர் பட்டாளத்துடன் சமீபத்தில் ஒளிபரப்பாக ஆரம்பித்த தொடர் 'வைதேகி காத்திருந்தாள்'.கடந்த டிசம்பர் 20 ஆம் தேதி ஒளிபரப்பாக ஆரம்பித்த இந்த தொடர் சரியாக 37 எபிசோடுகள் வரை மட்டுமே ஒளிபரப்பாகியுள்ளது.
இந்த தொடரில் ஹீரோவாக நடித்து வந்த பிரஜின் தொடரை விட்டு சமீபத்தில் விலகினார். அவருக்கு பதிலாக முன்னா ரஹ்மான் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. ஆனாலும், கடந்த பிப்ரவரி 4 ஆம் தேதிக்கு பிறகு இந்த தொடர் ஒளிபரப்பாகவில்லை. அதுமட்டுமில்லாமல் ஸ்லாட்டிலும் அந்த தொடர் இடம்பெறவில்லை. இந்நிலையில் இந்த தொடர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதா? இல்லை மொத்தமாக முடித்து வைக்கப்பட்டதா? என்ற அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை.