காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
ஜீ தமிழ் தொலைக்காட்சியின் 'என்றென்றும் புன்னகை' தொடரில் ஹீரோவாக சித்து கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தீபக். இவர், சின்னத்திரை நடிகையான அபிநவ்யா என்பவரை காதலித்து வந்த நிலையில், இருவரது திருமணமும் சமீபத்தில் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் திருமணமான கையோடு தீபக், 'என்றென்றும் புன்னகை' தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'என்றென்றும் புன்னகை' தொடரிலிருந்து தனிப்பட்ட சில காரணங்களால் அதிகாரப்பூர்வமாக விலகுகிறேன். நீங்கள் கொடுத்த அன்பிற்கும், ஆதரவிற்கும் மகிழ்ச்சி. இதே அன்பை புது சித்துவுக்கும் வழங்குங்கள். புதிய ப்ராஜெக்டில் விரைவில் சந்திக்கிறேன்' என அதில் தெரிவித்துள்ளார்.
கடந்த 2020ஆம் ஆண்டு ஒளிபரப்பாக ஆரம்பித்த இந்த தொடரில், நட்சத்திரா ஸ்ரீனிவாஸ், கவிதா, நிதின் ஐயர், ராஜேஸ்வரி, சுஷ்மா நாயர் உள்ளிட்ட நடிகர்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். பிரபல சின்னத்திரை நடிகை நீலிமா ராணி இந்த தொடரை தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.