இந்த ஆண்டில் திரிஷா நடிப்பில் ஆறு படங்கள் ரிலீஸ் | பேட்ட படத்திற்கு பிறகு ரெட்ரோ படம் தான் : கார்த்திக் சுப்பராஜ் | சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்தி உறுதி | முதல் முறையாக ஜோடி சேரும் துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே | அஜித் வைத்த நம்பிக்கை குறித்து நெகிழ்ந்த அர்ஜுன் தாஸ் | 7 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பை துவங்கிய கிச்சா சுதீப்பின் பிரமாண்ட படம் | 15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை |
சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நீலிமா ராணி. அதன்பின் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஹிட் சீரியல்களில் நடித்து வந்தார். தென்னிந்திய மொழிகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் இதுவரை 15 க்கு மேற்பட்ட சீரியல்களில் நடித்துள்ளார்.
திருமணத்திற்கு பிறகு நடிப்பில் கவனம் செலுத்திக் கொண்டே சீரியல் தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். கடைசியாக விஜய் டிவியின் அரண்மனைக் கிளி தொடரில் நடித்துக் கொண்டிருந்த நீலிமா, அதிலிருந்து திடீரென விலகினார். அதன்பின் சில காலத்திலேயே தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்தார். கர்ப்பகாலத்தில் விதவிதமாக போட்டோஷூட் நடத்தி சமூகவலைதளத்தில் பதிவிட்டு வந்தார்.
இந்நிலையில் அவருக்கு தற்போது பெண் குழந்தை பிறந்துள்ள இனிப்பான செய்தியை ரசிகர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார். இது அவரது இரண்டாவது குழந்தை என்பதுடன், 12 ஆண்டுகள் கழித்து பிறக்கும் குழந்தை என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இவர்களுக்கு அதிதி என்ற மகள் உள்ளார். ரசிகர்கள் பலரும் மிகுந்த அக்கறையோடு தாய், சேய் நலத்தை விசாரித்து வருகிறார்கள். மேலும், பிரபலங்களும், ரசிகர்களும் நீலிமாவிற்கு வாழ்த்துகளையும் தெரிவித்து வருகிறார்கள்.