ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் | நிவேதா பெத்துராஜுக்கு திருமணம் | 'திரெளபதி' இரண்டாம் பாகத்தில் சரித்திர கதை | பிளாஷ்பேக் : காமெடி நாயகனாக விஜயகாந்த் நடித்த படம் | சிரிப்பு சத்தம், காமெடி பஞ்சத்தில் தவிக்கும் தமிழ் சினிமா | பிளாஷ்பேக் : உலகம் முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோற்ற கதை | ‛பெத்தி' பட பாடலுக்கு ஆயிரம் பேருடன் நடனமாடிய ராம்சரண் | தீபாவளி போட்டியில் டீசல் : ஆக்ஷன் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் |
தொலைக்காட்சி பிரபலமான நீலிமா ராணி கர்ப்பமாக இருக்கும் போது தடுப்பூசி போட்டால் என்ன ஆகும் என்பதை பகிர்ந்து கொண்டார்.
90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் சீரியல்களில் வில்லியாகவும், நாயகியாகவும் நடித்து பிரபலமானவர் நீலிமா ராணி. சில படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றியுள்ளார். திருமணத்திற்கு பின் பெரிதாக நடிப்பில் கவனம் செலுத்தாமல் இருக்கிறார். இவருக்கு அதிதி என்ற மூன்று வயது பெண் குழந்தை இருக்கும் நிலையில் இரண்டாவதாக கர்ப்பமுற்றுள்ளார். இந்நிலையில் இவர் கொரோனா தடுப்பூசியும் செலுத்திக் கொண்டார். இது குறித்து பல கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்து வந்த நிலையில் அதற்கு தற்போது நீலிமா விளக்கமளித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறிய போது, இப்போது நான் கர்ப்பமாக உள்ளேன். குடும்பத்தினர், மருத்துவர் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள அறிவுறுத்தினர். தடுப்பூசி தொப்புள் கொடியையோ, குழந்தையையோ சென்றடையாது. இதை புரிய வைத்தது என் கணவர் தான். அதன் பிறகே தான் நான் தடுப்பூசி போட்டுக் கொண்டேன் எனக்கு எந்த பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை என தெளிவுப்படுத்தினார்.