‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

பிரபல மாடல் மற்றும் விளம்பர நடிகையான திவ்யப்ரியா சிவம், முன்னதாக பாலிமர் தொடரில் ஒளிபரப்பான 'ராஜமன்னார் வகையறா' என்ற தொடரில் நடித்திருந்தார். சினிமாவிலும் நடிக்க ஆரம்பித்துள்ள அவர் ஜீ தமிழின் 'கோகுலத்தில் சீதை' தொடரில் ஷாலினி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அவரது வருகை பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கல்லூரி நாட்களிலேயே நடிகையாக கனவோடு இருந்த திவ்யப்ரியா சிவம், தனது முதல் போட்டியிலேயே 'மிஸ் ஐகானிக் கோயம்புத்தூர்' பட்டத்தை வென்றார். தொடர்ந்து 'மிஸ் தமிழ்நாடு' 'மிஸ் செளத் இந்தியா' உள்ளிட்ட போட்டிகளிலும் வென்று பிரபலமானார். இவருக்கு ஏற்கனவே ரசிகர்கள் பட்டாளம் பெருகியுள்ளது. இந்நிலையில் முன்னணி தொலைக்காட்சியின் தொடரில் நெகடிவ் கதாபாத்திரத்தில் அவர் என்ட்ரி கொடுத்துள்ளதால் அந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.
திவ்யப்ரியா சிவம் நடித்து வரும் காட்சிகள் ஏற்கனவே ஒளிபரப்பாக ஆரம்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.




