மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
பிரபல மாடல் மற்றும் விளம்பர நடிகையான திவ்யப்ரியா சிவம், முன்னதாக பாலிமர் தொடரில் ஒளிபரப்பான 'ராஜமன்னார் வகையறா' என்ற தொடரில் நடித்திருந்தார். சினிமாவிலும் நடிக்க ஆரம்பித்துள்ள அவர் ஜீ தமிழின் 'கோகுலத்தில் சீதை' தொடரில் ஷாலினி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அவரது வருகை பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கல்லூரி நாட்களிலேயே நடிகையாக கனவோடு இருந்த திவ்யப்ரியா சிவம், தனது முதல் போட்டியிலேயே 'மிஸ் ஐகானிக் கோயம்புத்தூர்' பட்டத்தை வென்றார். தொடர்ந்து 'மிஸ் தமிழ்நாடு' 'மிஸ் செளத் இந்தியா' உள்ளிட்ட போட்டிகளிலும் வென்று பிரபலமானார். இவருக்கு ஏற்கனவே ரசிகர்கள் பட்டாளம் பெருகியுள்ளது. இந்நிலையில் முன்னணி தொலைக்காட்சியின் தொடரில் நெகடிவ் கதாபாத்திரத்தில் அவர் என்ட்ரி கொடுத்துள்ளதால் அந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.
திவ்யப்ரியா சிவம் நடித்து வரும் காட்சிகள் ஏற்கனவே ஒளிபரப்பாக ஆரம்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.