முதல் நாளில் 39 கோடி வசூலித்த 'கிங்டம்' | ஆலியா பட், ரன்பீர் வசிக்கப் போகும் 250 கோடி புதிய பங்களா | மீண்டும் காதலருடன் வெளிப்படையாக நகர்வலம் வந்த சமந்தா : வைரலாகும் வீடியோ | பரிசு அறிவிப்பதில் நடந்த குளறுபடி : மேடையில் கண்ணீர் விட்டு அழுத நடிகை | இலங்கை சுற்றுப்பயணத்தில் கூட்டத்தில் ஒருவனாக மாறிய மகேஷ்பாபு | எதிர்ப்பு வலுத்ததால் நடிகர் சங்க போட்டியில் இருந்து விலகிய வில்லன் நடிகர் | தலைவன் தலைவி 50 கோடி வசூல் என அறிவிப்பு | யு டியூப் ரிலீஸ் : அமீர்கான் வழியை மற்றவர்கள் பின்பற்றுவார்களா ? | இன்று 7 படங்கள் ரிலீஸ் : முன்பதிவு நிலவரம் என்ன? | தள்ளிப்போகிறது ஜிவி பிரகாஷின் இரண்டு படங்கள்? |
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடர் தமிழக குடும்ப பெண்களை வெகுவாக கவர்ந்துள்ளது. சமீபத்தில் அந்த தொடரின் வெற்றி விழா கொண்டாடிய போது சாமானிய ரசிகர்களில் சிலர் பாக்கியலட்சுமி கதாபாத்திரத்தை பார்த்து இன்ஸ்பியர் ஆகி வாழ்வில் சாதித்த கதைகளை பகிர்ந்து கொண்டனர். இந்நிலையில் அந்த தொடரில் தற்போது சமகால சமூக பிரச்னையை பேசி அதற்கு தீர்வு சொல்லும் வகையில் கதை அமைக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் மாணவிகளுக்கு பள்ளியிலும், பொதுவெளியிலும் நடக்கும் பாலியல் தொல்லைகள் குறித்த சம்பவங்களை மையப்படுத்தியும் அதற்கு தீர்வு கூறும் விதமாகவும் இந்த எபிசோடுகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இந்த சமூக பிரச்னையை சீரியல் மூலம் அனைவரிடமும் கொண்டு சேர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே சீரியல் குழுவினரின் நோக்கம் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக பள்ளி மாணவி கதாபாத்திரத்தில் ப்ரணிகா நடித்து வருகிறார். அவர் நடிக்கும் காட்சிகள் தற்போது ஒளிபரப்பாகி வருகின்றன.