நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. அந்த வகையில் தொலைக்காட்சியில் பிரபலமான நட்சத்திரங்கள் பங்குபெறும் மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரை நிகழ்ச்சியும் ஒன்று. இதில் 12 ஜோடிகள் பங்கேற்று வந்தனர். பல போட்டிகள், சவால்கள் கொண்ட இந்த நிகழ்ச்சியில் வாரவாரம் ஒரு ஜோடி எலிமினேட் ஆகி வந்தது. நிகழ்ச்சியின் இறுதிகட்டத்தில் டாப் 5 ஜோடிகள் போட்டியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். வைல்டு கார்ட் எண்ட்ரியாக மேலும் ஒரு ஜோடி கலந்துகொள்ள, 6 ஜோடிகள் பைனலில் மோதியது. இந்த விறுவிறுப்பான இறுதி போட்டியில் சரத் - கிருத்திகா ஜோடி வெற்றி பெற்று டைட்டிலை கைப்பற்றியது. மேலும், பரிசுத்தொகையாக ரூ. 10 லட்சத்தையும் வென்றது. இவர்கள் வெற்றியடைந்ததை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.