சிவகார்த்திகேயன் வெளியிடும் ஹவுஸ்மேட்ஸ்: பேய் படமா? வேறுவகை ஜானரா? | மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் |
விஜய் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் புதிய தொடர் வைதேகி காத்திருந்தாள். ப்ரஜின் இந்த தொடரில் ஹீரோவாக நடிக்கிறார். லதா, யமுனா சின்னதுரை, யோகேஷ் உள்பட பலர் நடிக்கிறார்கள். செய்தி வாசிப்பாளராக இருந்து பின்னர் சின்னத்திரையில் நெஞ்சம் மறப்பதில்லை தொடர் மூலம் புகழ்பெற்ற சரண்யா, வைதேகி என்ற டைட்டில் கேரக்டரில் நடிக்கிறார்.
காணாமல் போன வைதேகியாக நடித்துக் கொண்டு ஒரு பணக்கார பண்ணை வீட்டுக்குள் நுழைகிறார் சரண்யா. பண்ணை சொத்துக்களை அபகரிக்க அவருக்கு பின்னால் ஒரு ஏமாற்று கூட்டம் இருக்கிறது. அந்த வீட்டுக்குள் நுழைந்த பிறகுதான் தெரிகிறது. காணாமல் போன வைதேகியே அவர்தான் என்று. வைதேகியை பிரஜின் காதலிக்கிறார். இந்த பிரச்சினைகளை வைதேகி எப்படி சமாளிக்கிறார் என்பதுதான் சீரியலின் கதை. தற்போது படப்பிடிப்பு நடந்து வருகிறது. விரைவில் ஒளிபரப்பாகிறது.