'தக் லைப்' படத்தில் இடம் பெற்ற 'அமானுஷ்யன்' நாவலின் சில பகுதிகள் | 'அகண்டா 2' படத்தில் வில்லனாக ஆதி | காஞ்சனா 4 படத்தின் நிலவரம் என்ன? | மீண்டும் படம் இயக்கி நடிக்கும் பிரதீப் ரங்கநாதன்! | சின்னத்திரை நடிகை கண்மணிக்கு ஆண் குழந்தை பிறந்தது! | அதிர்ச்சி கொடுத்த 'தக்லைப்' படத்தின் ஐந்தாவது நாள் வசூல்! | தமன்னா நடிக்கும் 'விவான்' படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது! | வனிதா விஜயகுமாரின் 'மிஸஸ் அண்ட் மிஸ்டர்' படத்தின் ரிலீஸ் தேதி போஸ்டரை வெளியிட்ட ரஜினிகாந்த்! | தக் லைப் : திட்டமிட்டதற்கு முன்பாகவே ஓடிடி ரிலீஸ்? | 7 வருடங்களுக்கு பிறகு தமிழில் நடிக்கும் விஜய் யேசுதாஸ் |
தமிழ் மற்றும் மலையாள சின்னத்திரை தொடர்களில் நடித்து வருகிறவர் பிரவீனா. தமிழில் பிரியமானவளே, மகராசி உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார், தற்போது ராஜா ராணி சீசன் 2ல் நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களிலும் பிசியாக இயங்குகிறவர்.
இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் தனது புகைப்படங்களை மார்பிங் செய்து சிலர் பகிர்ந்த வருவதாக கேரள ஏடிஜிபி மனோஜ் ஆபிரஹாமிடம் புகார் செய்தார். இதை தொடர்ந்து விசாரணை நடத்திய திருவனந்தபுரம் போலீசார் பிரவீனாவின் படத்தை ஆபாசமாக வெளியிட்டதாக கன்னியாகுமரியை சேர்ந்த மணிகண்டன், பாக்யராஜ் என்ற இரு இளைஞர்களை கைது செய்தனர். இருவரும் திருவனந்தபுரம் மாவட்ட தலைமை குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதுகுறித்து பிரவீனா கூறியிருப்பதாவது: என்னை பின் தொடர்பவர்களுக்கு என் அன்பான வணக்கம். கடந்த சில மாதங்களாக, தெரியாத சமூக வலைதள கணக்கு ஒன்று என்னைப் போல் நடித்து, என்னை பின்தொடரும் அனைவருக்கும் தேவையற்ற செய்திகளையும் படங்களையும் அனுப்பி வருகிறார்கள் . என் குடும்பத்தினர் மற்றும் என்னுடன் பணிபுரியும் சக ஊழியர்களுக்கும் தேவையில்லாத சில புகைப்படங்களை அனுப்பியுள்ளனர். பலமுறை நான் எச்சரித்தும் பலனில்லை.
எனவே, நான் அதிகாரப்பூர்வமாக சைபர் போலீசில் புகார் செய்துள்ளேன். தற்போது என்னை பின்தொடர்பவர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். என்னைப் போல் நடிக்கும் அல்லது என் பெயரில் தேவையற்ற செய்திகளை அனுப்புகிறவர்களை நீக்கி விடுங்கள் என்று அவர் கூறியுள்ளார். மேலும் கைது நடவடிக்கையை தொடர்ந்து, சம்பந்தபட்டவர்களை கைது செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பாதிக்கப்பட்ட பெண்கள் பெரும்பாலும் புகார் செய்ய முன்வருவதில்லை. இது குற்றவாளிகளுக்கு சாதகமாக அமைந்து விடுகிறது. பாதிக்கப்பட்ட அனைவரும் புகார் அளிக்க வேண்டும். என்று கூறியுள்ளார்.