இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
விஜய் டிவியின் நம்பர்1 தொடரான பாரதி கண்ணம்மாவில் டுவிஸ்ட்டுக்கு மேல் ட்விஸ்ட்டாக பல புதிய திருப்பங்கள் நடைபெறவுள்ளது. விறுவிறுப்பாக சென்றுக்கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா தொடரில் வில்லி வெண்பா சிறைக்கு செல்வது போல காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து வெண்பா இல்லாமல் கதை எப்படி நகரும் என்ற ரசிகர்களின் கேள்விக்கு பதிலாக பழைய வில்லனான மாயாண்டி கதாபாத்திரம் ரீ என்ட்ரி கொடுக்கும் வகையில் கதைக்களம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
சிறைக்கு செல்லும் வெண்பா அங்கே இருக்கும் மாயாண்டியை சந்தித்து கண்ணம்மாவை பழிவாங்க கூட்டு சேர்கிறார். இதற்கிடையில் சிறையிலிருந்து வெளிவரும் மாயாண்டி வெண்பாவின் வேலைக்காரி சாந்தியை சந்தித்து கண்ணம்மாவை பழிவாங்க திட்டம் தீட்டுகிறார். இதனால் கதைக்களம் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
ஆனால், ஒருபுறம் பாரதி கண்ணம்மாவின் ஹீரோயின் ரோஷினி சீரியலை விட்டு விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மற்றொரு புறம் முக்கிய நடிகையான வெண்பா கர்ப்பமாக இருக்கும் காரணத்தால் சீரியலை விட்டு விலக வேண்டிய கட்டாயத்தில் அவர் சிறைக்கு சென்றுவிட்டதாக காட்சியமைக்கப்படுள்ளது. நிலவரம் இப்படி இருக்க வில்லனாக என்ட்ரி கொடுக்கும் மாயாண்டி கதாபாத்திரம் பாரதி கண்ணம்மாவின் டிஆர்பிக்கு கை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.