நடிகை ராதிகாவுக்கு டெங்கு : மருத்துவமனையில் அனுமதி | மோசடி வழக்கு : காமெடி நடிகர் சீனிவாசன் கைது | பிரபாஸ் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பூரி ஜெகன்நாத், சார்மி கவுர் | சோசியல் மீடியாவில் 7 ஆண்டுகளாக அவதூறு பரப்பிய பெண்ணை அடையாளப்படுத்திய பிரித்விராஜ் மனைவி | அசினுடன் நடந்த டெஸ்ட் ஷூட் : பஹத் பாசிலுக்கு கைமாறிய பிரித்விராஜ் படம் | நடிகர் சங்கத்திற்கு பெண் தலைமை : மோகன்லால் ஆலோசனைப்படி வேட்பு மனுவை வாபஸ் பெற்ற நடிகர் | ஜான்வி கபூரின் ‛பரம் சுந்தரி' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தனுஷ் நடிக்கும் 54வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது | கதை சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீலீலாவின் ஆஷிகி 3 | மாதம்பட்டி ரங்கராஜ் உடனான திருமணம் : கணவன், மனைவியாக பயணத்தை துவங்கியதாக ஜாய் கிரிஸ்டலா பதிவு |
காற்றுக்கென்ன வேலி சீரியலில் தொடர்ந்து முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வரும் நடிகர்கள் மாற்றப்பட்டு வருகின்றனர். விஜய் டிவியல் ஒளிப்பரப்பாகி வரும் காற்றுக்கென்ன வேலி சீரியல் ஒருபுறம் சைலன்ட்டாக ஹிட் அடித்து வருகிறது. ஆனால், அந்த சீரியலில் முக்கிய கதாபாத்திர நடிகர்கள் அடிக்கடி மாற்றப்பட்டு வருகின்றனர். சமீபத்தில் அந்த தொடரின் சாரதா கதாபாத்திரத்தில் ஜோதி ராயும், நாயகன் சூர்யா கதாபாத்திரத்தில் சுவாமிநாதன் அனந்தராமனும் மாற்றப்பட்டனர்.
இந்நிலையில் தொடரின் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த வீணா வெங்கடேஷ் தொடரை விட்டு விலகியுள்ளார். அவருக்கு பதிலாக பிரபல நடிகை சுஜாதா பஞ்சு மீனாட்சியாக நடித்து வருகிறார். இப்படி இந்த தொடரின் முக்கிய கதாபாத்திரங்களின் நடிகர்கள் அடிக்கடி மாற்றப்பட்டு வருவதால் சீரியல் முடிவை நோக்கி செல்கிறதா என ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர்.