துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
பிரபல பட்டிமன்ற பேச்சாளரான பாரதி பாஸ்கரின் உடல்நலம் நன்றாக தேறி வருகிறது. இந்நிலையில் அவர் தனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தொலைக்காட்சி பட்டிமன்றங்களில் நட்சத்திர பேச்சாளரான பாரதி பாஸ்கர் அன்மையில் மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில் அவர் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் பாரதி பாஸ்கர், 'மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு காரணமாக 22 நாட்கள் மருத்துவ சிகிச்சையில் இருந்து வீடு திரும்பியுள்ளேன். உடல்நலம் நன்றாக தேறி வருகிறது. எல்லா மதங்களையும் கடந்து எல்லோரும் எனக்காக பிரார்த்தனை செய்திருக்கிறீர்கள். நீங்கள் அனுப்பிய கோவில் பிரசாதங்கள் மலை போல் குவிந்துள்ளது. உங்களுக்காக நான் எதுவுமே செய்ததில்லை. ஆனால் நான் உங்களுடன் தமிழில் பேசியிருக்கிறேன். தமிழ் உங்களையும் என்னையும் இணைத்துள்ளது. இரண்டாவது முறை கிடைத்த இந்த வாழ்க்கை இன்னும் அழகாக மாறியிருக்கிறது. முழுமையாக உடல்நலம் தேறி விரைவிலேயே மேடைக்கு வருவேன் என நம்புகிறேன். இது என்னுடைய இரண்டாவது இன்னிங்ஸ். உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை. சிறு வார்த்தையில் நன்றி என இதை சொல்லிவிட முடியாது. மீண்டும் சந்திப்போம்' என உருக்கமாக பேசியுள்ளார்.
பாரதி பாஸ்கரின் உடல்நலம் முழுதாக குணமடைய வேண்டும் என பலரும் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.