ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
சீரியலுக்காக பிரபல ஹீரோயின் செய்த மிகவும் ரிஸ்க்கான ஸ்டண்ட் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. இன்றைய காலகட்டத்தில் படங்களை விட சீரியல்களுக்கு ரசிகர்கள் பெருகி வருகின்றனர். அதற்கேற்றார் போல் சீரியல் எடுப்பவர்களும் காட்சியின் பிரம்மாண்டத்திலும், ரிஸ்க்கான ஆக்சன் காட்சிகளையும் வைத்து வருகின்றனர். அதிலும் சமீப காலங்களில் சீரியல்களில் நடிகைகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டு வருகிறது. எனவே ரிஸ்க்கான சண்டை காட்சிகளில் அவர்களது பங்கும் பெருகி வருகிறது.
அந்த வரிசையில் சீரியல் நடிகை தர்ஷினி கவுடா மிகவும் ரிஸ்க்கான சண்டை காட்சியில் நடித்துள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் சில்லுன்னு ஒரு காதல் தொடரில் ஹீரோயினாக நடித்து வருகிறார் தர்ஷினி கவுடா. அந்த தொடரில் ஆழ்துளை கிணற்றில் மாட்டிக் கொண்ட குழந்தையை காப்பாற்றும் காட்சிக்காக தர்ஷிணி கவுடா இடுப்பில் கயிறை கட்டிக் கொண்டு தலைகீழாக இறங்குகிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்க்கும் ரசிகர்கள் தர்ஷினியின் தைரியத்தை நினைத்து பாராட்டி வருகிறார்கள்.