துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
சீரியலுக்காக பிரபல ஹீரோயின் செய்த மிகவும் ரிஸ்க்கான ஸ்டண்ட் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. இன்றைய காலகட்டத்தில் படங்களை விட சீரியல்களுக்கு ரசிகர்கள் பெருகி வருகின்றனர். அதற்கேற்றார் போல் சீரியல் எடுப்பவர்களும் காட்சியின் பிரம்மாண்டத்திலும், ரிஸ்க்கான ஆக்சன் காட்சிகளையும் வைத்து வருகின்றனர். அதிலும் சமீப காலங்களில் சீரியல்களில் நடிகைகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டு வருகிறது. எனவே ரிஸ்க்கான சண்டை காட்சிகளில் அவர்களது பங்கும் பெருகி வருகிறது.
அந்த வரிசையில் சீரியல் நடிகை தர்ஷினி கவுடா மிகவும் ரிஸ்க்கான சண்டை காட்சியில் நடித்துள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் சில்லுன்னு ஒரு காதல் தொடரில் ஹீரோயினாக நடித்து வருகிறார் தர்ஷினி கவுடா. அந்த தொடரில் ஆழ்துளை கிணற்றில் மாட்டிக் கொண்ட குழந்தையை காப்பாற்றும் காட்சிக்காக தர்ஷிணி கவுடா இடுப்பில் கயிறை கட்டிக் கொண்டு தலைகீழாக இறங்குகிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்க்கும் ரசிகர்கள் தர்ஷினியின் தைரியத்தை நினைத்து பாராட்டி வருகிறார்கள்.