இன்பன் உதயநிதி ஹீரோவாகும் படம் : மாரி செல்வராஜ் இயக்குகிறாரா? | இந்த வார ஓடிடி ரிலீஸ்...... நீங்கள் எதிர்பார்த்த 'வார்-2' முதல் 'பாம்' வரை...! | ஜட்ஜ் ஆக நடிக்கும் சோனியா அகர்வால் | புதிய இசை நிறுவனம் தொடங்கிய ஐசரி கணேஷ் | பிளாஷ்பேக் : தங்கை கேரக்டரில் அதிகம் நடித்த நடிகை | வைக்கப்பட்ட சீல் அகற்ற துணை முதல்வர் உத்தரவு, 'கன்னட பிக் பாஸ்' தொடர்கிறது… | ராட்சசன், ஆர்யன் இரண்டும் வேறு வேறு கதை களம்: விஷ்ணு விஷால் | பிளாஷ்பேக் : வாரிசு அரசியலை விமர்சித்த கருணாநிதி | விஜய் சேதுபதி படத்திற்கு இசையமைக்கும் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் | 'பாகுபலி 3' எதிர்காலத்தில் உருவாகுமா? |
காத்து வாக்குல ரெண்டு காதல், சாகுந்தலம் படங்களில் நடித்து வரும் சமந்தா, விரைவில் தனது புதிய படங்கள் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று தெரிகிறது. மேலும், கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது விவாகரத்து குறித்த தகவலை சோசியல் மீடியாவில் வெளியிட்ட சமந்தா, தற்போது சோசியல் மீடியாவில் தனது அழகிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மேலும், விவாகரத்து அறிவிப்புக்கு பிறகு அவர் தெலுங்கு டிவி சேனலில் ஜூனியர் என்டிஆர் நடத்தி வரும் எவரு மீலோ கோடீஸ்வரலு என்ற ரியாலிட்டி ஷோவில் சிறப்பு போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சி அடுத்த வாரம் ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஜூனியர் என்டிஆர் கேட்ட கடினமான கேள்விகளுக்கு பதிலளித்த சமந்தா, ரூ. 25 லட்சம் வென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்பு இதே நிகழ்ச்சியில் ராஜமவுலி, ராம் சரண், கொரட்டல்ல சிவா உள்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.