புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
சிவா இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள அண்ணாத்த படம் தீபாவளிக்கு வெளியாகிறது. இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. குடும்ப பின்னணியில் பக்கா கமர்ஷியல் படமாக உருவாகி வருகிறது. இமான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய ‛அண்ணாத்த அண்ணாத்த என்ற பாடலை மாலை 6மணிக்கு வெளியிட்டனர். ரஜினிக்காக பல ஓபனிங் பாடலை பாடி உள்ளார் எஸ்.பி.பி. அனேகமாக இந்த பாடலும் ஓபனிங் பாடலாக தான் இருக்கும் என தெரிகிறது. நம்பிக்கைக்கான வரிகளுடன் அண்ணாத்த ரஜினியின் புகழ்பாடும் பாடலாக இந்த பாடல் அமைந்துள்ளது.
இந்த பாடல் வெளியானதும் நடிகர் ரஜினி டுவிட்டரில், ‛‛45 ஆண்டுகள் என் குரலாக வாழ்ந்த எஸ்பிபி, அண்ணாத்தே படத்தில் எனக்காக பாடிய பாடலின் படப்பிடிப்பின் போது, இதுதான் அவர் எனக்குப் பாடும் கடைசிப் பாடலாக இருக்கும் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை. என் அன்பு எஸ்பிபி தன் இனிய குரலின் வழியாக என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பார் என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.