மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
சூர்யா தயாரிப்பில் அவரது மனைவி ஜோதிகா நடிப்பில் உருவாகி உள்ள படம் ‛உடன்பிறப்பே'. குடும்ப உறவுகளை பற்றி குறிப்பாக அண்ணனுக்கும், கணவனுக்கும் இடையில் மாட்டிக் கொண்ட பாசக்கார பெண்ணை பற்றிய கதையாக உருவாகி உள்ளது. ஜோதிகாவின் 50வது படமாக உருவாகி உள்ள இப்படத்தில் ஜோதிகாவின் கணவராக சமுத்திரகனியும், அண்ணனாக சசிகுமாரும் நடித்துள்ளனர். சரவணன் இயக்கி உள்ளார். இப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
சூர்யா பேசும்போது : 1998ல் தரமணி பிலிம்சிட்டியில் இயக்குனர் வசந்த் ஒரு பாறைக்கு அருகில் ஜோதிகாவை எனக்கு அறிமுகப்படுத்தினார். வேற ஊர், வேற மொழியை தாண்டி இங்கு வந்து நம்மூர் மொழியை கற்று, இந்த மக்கள் மனதுக்குள் அவர் இடம் பிடித்துள்ளார். அவர் ஏன் சில படங்கள் பண்ணினார், பண்ணவில்லை என தெரியவில்லை. வாழ்க்கையில் அவர் எடுக்கும் முடிவுகளை ஆச்சர்யமாக பார்க்கிறேன். ஆசீர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன். நண்பனாக, கணவனாக ஜோ எனக்கு கிடைத்ததற்கு நன்றி. ஜோதிகாவின் 50வது படம் உடன்பிறப்பே. மொத்த படக்குழுவும் உணர்வுப்பூர்வமாக நடித்துள்ளனர். அழகான படம் படக்குழுவுக்கு என் வாழ்த்துக்கள் என்றார் சூர்யா.