புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
காதல் திருமணம் செய்துகொண்ட நடிகை சமந்தாவும் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் நான்கு வருட திருமண பந்தம் முடிவதற்குள்ளாகவே தாங்கள் பிரிவதாக பரஸ்பரம் நேற்று அறிவித்துள்ளனர். கடந்த சில நாட்களாகவே இவர்களது பிரிவு குறித்த அறிவிப்பு எதிர்பார்த்த ஒன்றுதான் என்றாலும் இவர்களே தற்போது அறிவித்தது ரசிகர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியாகவே இருந்தது. இந்த நிலையில் இவர்கள் அறிவிப்பு வெளியான கொஞ்ச நேரத்தில் சமந்தாவின் நெருங்கிய தோழியான பாடகி சின்மயி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அன்பு மட்டும் போதாது என்கிற தலைப்பில் ஒரு கருத்தை பகிர்ந்துள்ளார்.
அதில், "நீங்கள் திருமணம் செய்வதற்கு முன்பாக உங்கள் வருமானம், வரவு-செலவு, மதம், குழந்தைகளை வளர்க்கும் ஸ்டைல், குடும்பத்துடன் எப்படி இணைந்து பயணிப்பீர்கள், குழந்தைகள் மீது எந்த விதமான நம்பிக்கைகளை புகுத்துவீர்கள், உங்களது சிறுவயது அபிலாஷைகள், செக்ஸ் எதிர்பார்ப்புகள், துணை குறித்த எதிர்பார்ப்புகள், பொருளாதார எதிர்பார்ப்புகள், குடும்பத்தினருடைய ஆரோக்கிய விபரம், அவர்களது மன நலம் குறித்த விபரம், அங்கே செய்யவேண்டிய கடமைகள், சொந்த வீட்டுக்கனவு, வேலை, படிப்பு, அரசியல் பார்வைகள் மற்றும் மனதில் என்ன தோன்றுகிறதோ அவையெல்லாம் குறித்து தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள்.. அன்பு மட்டுமே போதாது.." என்று கூறியுள்ளார்.
சமந்தாவின் காதல் திருமணம் இப்படி நான்கு வருடங்களிலேயே முடிவடைந்துள்ளது என்பதாலேயே, காதல் திருமணம் குறித்து இப்படி ஒரு பதிவை சின்மயி வெளியிட்டுள்ளார் என்று நெட்டிசன்கள் பேசிக்கொள்கிறார்கள்.