‛‛2 ஆயிரம் சம்பளம் கேட்டேன், 4 லட்சம் கொடுத்தார் நட்டி'': சிங்கம்புலி நெகிழ்ச்சி | சொந்த செலவில் பிளைட்டில் வந்து ரஞ்சித்துக்கு உதவிய விஜய்சேதுபதி | கன்னடத்தில் அதிக வசூல் படங்கள் : இரண்டாம் இடம் பிடித்த 'காந்தாரா சாப்டர் 1' | அடுத்தடுத்து வெளியாகும் கவின் படங்களின் அப்டேட் | கன்னட பிக்பாஸ் அரங்கு 'சீல்' வைக்கப்பட்டது - அரசு நடவடிக்கை | பிளாஷ்பேக்: இயக்குநர் துரையின் கலைப்பசிக்கு தீனி போட்ட காவியத் திரைப்படம் | தனிப்பட்ட வாழ்க்கையில் கேமரா வைக்க முடியாது: ராஷ்மிகா மந்தனா | எக்ஸ் தளம் நெகட்டிவிட்டி நிறைந்தது : ரவி தேஜா கருத்து | ராஜமவுலி - மகேஷ்பாபு படத்தின் பெயர் 'வாரணாசி'? | ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் |
காதல் திருமணம் செய்துகொண்ட நடிகை சமந்தாவும் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் நான்கு வருட திருமண பந்தம் முடிவதற்குள்ளாகவே தாங்கள் பிரிவதாக பரஸ்பரம் நேற்று அறிவித்துள்ளனர். கடந்த சில நாட்களாகவே இவர்களது பிரிவு குறித்த அறிவிப்பு எதிர்பார்த்த ஒன்றுதான் என்றாலும் இவர்களே தற்போது அறிவித்தது ரசிகர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியாகவே இருந்தது. இந்த நிலையில் இவர்கள் அறிவிப்பு வெளியான கொஞ்ச நேரத்தில் சமந்தாவின் நெருங்கிய தோழியான பாடகி சின்மயி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அன்பு மட்டும் போதாது என்கிற தலைப்பில் ஒரு கருத்தை பகிர்ந்துள்ளார்.
அதில், "நீங்கள் திருமணம் செய்வதற்கு முன்பாக உங்கள் வருமானம், வரவு-செலவு, மதம், குழந்தைகளை வளர்க்கும் ஸ்டைல், குடும்பத்துடன் எப்படி இணைந்து பயணிப்பீர்கள், குழந்தைகள் மீது எந்த விதமான நம்பிக்கைகளை புகுத்துவீர்கள், உங்களது சிறுவயது அபிலாஷைகள், செக்ஸ் எதிர்பார்ப்புகள், துணை குறித்த எதிர்பார்ப்புகள், பொருளாதார எதிர்பார்ப்புகள், குடும்பத்தினருடைய ஆரோக்கிய விபரம், அவர்களது மன நலம் குறித்த விபரம், அங்கே செய்யவேண்டிய கடமைகள், சொந்த வீட்டுக்கனவு, வேலை, படிப்பு, அரசியல் பார்வைகள் மற்றும் மனதில் என்ன தோன்றுகிறதோ அவையெல்லாம் குறித்து தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள்.. அன்பு மட்டுமே போதாது.." என்று கூறியுள்ளார்.
சமந்தாவின் காதல் திருமணம் இப்படி நான்கு வருடங்களிலேயே முடிவடைந்துள்ளது என்பதாலேயே, காதல் திருமணம் குறித்து இப்படி ஒரு பதிவை சின்மயி வெளியிட்டுள்ளார் என்று நெட்டிசன்கள் பேசிக்கொள்கிறார்கள்.