'தக் லைப்' படத்தில் இடம் பெற்ற 'அமானுஷ்யன்' நாவலின் சில பகுதிகள் | 'அகண்டா 2' படத்தில் வில்லனாக ஆதி | காஞ்சனா 4 படத்தின் நிலவரம் என்ன? | மீண்டும் படம் இயக்கி நடிக்கும் பிரதீப் ரங்கநாதன்! | சின்னத்திரை நடிகை கண்மணிக்கு ஆண் குழந்தை பிறந்தது! | அதிர்ச்சி கொடுத்த 'தக்லைப்' படத்தின் ஐந்தாவது நாள் வசூல்! | தமன்னா நடிக்கும் 'விவான்' படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது! | வனிதா விஜயகுமாரின் 'மிஸஸ் அண்ட் மிஸ்டர்' படத்தின் ரிலீஸ் தேதி போஸ்டரை வெளியிட்ட ரஜினிகாந்த்! | தக் லைப் : திட்டமிட்டதற்கு முன்பாகவே ஓடிடி ரிலீஸ்? | 7 வருடங்களுக்கு பிறகு தமிழில் நடிக்கும் விஜய் யேசுதாஸ் |
கடந்த 2017ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்ட சமந்தா-நாகசைதன்யா நட்சத்திர தம்பதியினர் நேற்று தாங்கள் திருமண வாழ்க்கையை முறித்துக் கொள்வதாக கூட்டாக அறிவித்தனர். இந்த செய்தி தமிழ், தெலுங்கு திரையுலக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும், இந்த பிரிவிற்கான காரணத்தை அவர்கள் இருவருமே தெரிவிக்கவில்லை. அதோடு கடந்த மூன்று மாதங்களாகவே நாகசைதன்யாவை விட்டு பிரிந்து வாழ்ந்து வரும் சமந்தா, தொடர்ந்து சினிமாவில் தான் கவனம் செலுத்தும் நோக்கில் சினிமா, வெப் சீரிஸ் என்று நடிப்பில் கவனத்தை திருப்பியுள்ளார். அதோடு, நாகசைதன்யாவை பிரிவது என்பது பல மாதங்களுக்கு முன்பே எடுக்கப்பட்ட முடிவு என்பதால் நேற்று இந்த செய்தியை வெளியிட்டது சமந்தாவிற்கு பெரிதாக மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்பதால் தொடர்ந்து அவர் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார்.
இந்தநிலையில், நாகசைதன்யாவை விவாகரத்து செய்ய தயாராகிவிட்ட சமந்தாவிற்கு அவரது சார்பில் ரூ.200 கோடி ஜீவனாம்சம் கொடுக்க முன்வந்ததாகவும் அதை அவர் வாங்க மறுத்து விட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. அதோடு நான் சினிமாவில் தனித்து வந்து போராடி வெற்றி பெற்றவள். அதனால் என்னால் சுயமாக சம்பாதித்து வாழ முடியும் என்று அவர் தெரிவித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.