புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
தெலுங்கு நடிகர் சங்கமான 'மா' சங்கத்திற்கு நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அக்டோபர் 10ம் தேதியன்று நடைபெற உள்ளது. பிரகாஷ் ராஜ் தலைமையில் ஒரு அணியும், மஞ்சு விஷ்ணு தலைமையில் மற்றொரு அணியும் முக்கிய போட்டியாளர்களாக உள்ளனர். பிரகாஷ் ராஜ் தெலுங்கரல்ல, அவர் ஒரு கன்னடர் என ஆரம்பத்திலிருந்தே எதிரணியினர் அவரைப் பற்றிப் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
ஆனால், அவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, “நான் தெலுங்கர் அல்லதான். கர்நாடகாவில் பிறந்தவன்தான் ஆனால், தெலுங்கு மாநிலங்களில்தான் நடிகராக வளர்ந்தவன். 9 நந்தி விருதுகள், 2 தேசிய விருதுகள் என்னிடம் உள்ளன. எதிரணியினரிடம் இத்தனை விருதுகள் உள்ளதா ?. தெலுங்கு மொழி பற்றி எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் என்னால் பேச முடியும். எதிரணியில் உள்ளவர்கள் இது குறித்து என்னுடன் போட்டி போட முடியுமா ?.,” என்றும் கேட்டுள்ளார்.
மேலும், “எதிரணியினர் தேவையில்லாமல் தெலுங்கு மாநிலங்களின் இரு முதல்வர்களையும் இந்தத் தேர்தலில் இழுக்கின்றனர். அவர்கள் இருவருமே மிகவும் பிஸியாக உள்ளனர். அவர்கள் இந்தத் தேர்தலில் ஆர்வம் காட்டவும் இல்லை. அவர்களைத் தேவையில்லாமல் இந்தத் தேர்தலில் சம்பந்தப்படுத்தி இந்தத் தேர்தலுக்கு அரசியல் சாயம் பூசுகிறார்கள்,” என்றும் குற்றம் சாட்டுகிறார்.