ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
வெற்றிமாறன் தற்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் விடுதலை படத்தை இயக்கி வருகிறார். அந்தப் படத்தை அடுத்து சூர்யா நடிப்பில் வாடிவாசல் திரைப்படத்தை இயக்க உள்ளார். இந்நிலையில் வெற்றிமாறன் அடுத்ததாக கமல்ஹாசனை வைத்து புதிய படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ஸ்ரீப்ரியா, ‛‛உள்ளாட்சித் தேர்தல், பிக்பாஸ், விக்ரம் படத்தை முடித்துவிட்டு கமல்ஹாசன், வெற்றிமாறன் உடன் புதிய படத்திற்காக இணைய இருப்பதாக'' தெரிவித்துள்ளார்.
வெற்றிமாறன் ஒரு நாவலை கமலிடம் சொன்னதாகவும் அவருக்கு அந்த நாவல் பிடித்து விட்டதால் நடிக்க ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இந்தப் படம் குறித்த பேச்சுவார்த்தை ஆரம்ப கட்ட நிலையில் உள்ளதாகவும் விரைவில் படம் குறித்த அப்டேட் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.