ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? | சர்வர் வேலை சாதாரணமானது இல்லை : இயக்குனர் கே.பாக்யராஜ் சொன்ன கதை | நயன்தாரா பிறந்தநாளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசளித்த விக்னேஷ் சிவன் | பிளாஷ்பேக்: நட்பின் ஆழம் பேசிய “எங்கள் தங்கம்” படப் பாடல்கள் | இப்போதே புரமோஷனை ஆரம்பித்த 'வாரணாசி' படக்குழு | 'எல்ஐகே' : விக்னேஷ் சிவன் எடுத்த அதிரடி முடிவு | இழந்த வெற்றியை 'மாஸ்க்'கில் மீட்பாரா கவின் ? | தெலுங்கு ரீ என்ட்ரிக்காக காத்திருக்கும் பிந்து மாதவி | தமிழுக்கு வரும் துளு நடிகை | பிளாஷ்பேக் : மம்முட்டி கேரக்டரில் நடித்த சிவகுமார் |

திரையுலகில் ஒன்றாக இணைந்து நடிக்கும்போது காதல் வசப்பட்ட நட்சத்திரங்கள் திருமண பந்தத்தில் இணைவது அவ்வப்போது நடக்கும் நிகழ்வுதான். அஜித்-ஷாலினி போல அழகாக நீடிக்கும் திருமண பந்தங்களும் உண்டு. இயக்குனர் விஜய்-அமலாபால் போல குறுகிய காலத்திலேயே முறிந்து போகும் திருமணங்களும் உண்டு. அந்த வகையில் நடிகை சமந்தா நடிகர் நாகசைதன்யா திருமண உறவிலும் மிகக்குறுகிய காலத்திலேயே விரிசல் விழுந்து விட்டதோ என்று நினைக்கும் அளவிலேயே சமீபத்திய நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன
இவர்களது திருமணம் நடைபெற்று இன்னும் நான்கு வருடங்கள் கூட நிறைவு பெறாத நிலையில், கடந்த சில வாரங்களாகவே இருவரும் பிரிந்து வாழ்கின்றனர் என்றும் விவாகரத்து பெறப்போகின்றனர் என்றும் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. அவ்வப்போது நடக்கும் நிகழ்வுகளும் அதை உறுதிப்படுத்துவது போலவே இருக்கின்றன. அதேசமயம் இவற்றை அவர்கள் இருவரும் நேரடியாக மறுக்கவோ விளக்கம் சொல்லவோ இல்லை.
இந்தநிலையில் வரும் அக்டோபர் 6ஆம் தேதி இவர்களது நான்காவது திருமண நாள் வருகிறது. கண்டிப்பாக அன்றைய தேதியில் இவர்கள் இருவரும் சேர்ந்து தான் வாழ்கிறார்கள் என்பதற்கான ஆதார செய்தியோ புகைப்படமோ அல்லது வாழ்த்தாவது நிச்சயம் வெளியாகும். இல்லையென்றால், மீடியாக்களில் வருவதுபோல இவர்கள் இருவரின் பிரிவும் உண்மைதான் என்பது நிச்சயமாகத் தெரிந்து விடும். அதுவரை பொறுத்திருந்து பார்ப்போம்