வித்தியாசமா கூவுறாங்க! மணிமேகலை வெளியிட்ட நறுக் வீடியோ | சீரியலிலும் அட்ஜெஸ்ட்மென்ட் இருக்கு - நிமிஷிகா பளீச் பேட்டி | சிம்பு நடிக்க இருந்த படத்தில் ரஜினியா? | மகனுக்கு அன்பு முத்தம் கொடுக்கும் நயன்தாரா! லைக்ஸ்களை அள்ளும் புகைப்படம்!! | பாடகி சுசித்ரா மீது கொச்சின் போலீசில் புகார்! | இன்ஸ்டா கணக்கை மீட்டெடுத்த ஜெயம் ரவி | திருவருள், மன்மதன், கொம்பன் - ஞாயிறு திரைப்படங்கள் | மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? |
கொரோனா இரண்டாவது அலை முடிவை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறதோ இல்லையோ, சினிமா தியேட்டர்கள் கொஞ்சம் கொஞ்சமாக மக்களை வரவழைத்துக் கொண்டிருக்கிறது. செப்டம்பர் மாதத்தில் 11 படங்கள் வரை வெளிவந்தாலும் 'கோடியில் ஒருவன்' படம் மட்டும் தான் லாபகரமான படமாக இருந்ததாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அக்டோபர் மாதம் 1ம் தேதியிலேயே புதிய பட வெளியீட்டுடன்தான் மாதம் ஆரம்பமாக உள்ளது. அக்டோபர் 9ம் தேதி சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'டாக்டர்' படம் வெளிவரப் போகிறது. அதற்கடுத்து அக்டோபர் 14ம் தேதி ஆயுத பூஜையை முன்னிட்டு 'அரண்மனை 3, எனிமி, ராஜவம்சம், தள்ளிப் போகதே' ஆகிய படங்கள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் மேலும் சில படங்கள் இடம் பெறுமா, அல்லது இதிலேயே சில படங்கள் வெளியேறுமா என்பது இனி வரும் நாட்களில் தெரியும்.
இப்போதைய நிலவரப்படி ஒரு 'பேய் காமெடி, ஒரு ஆக்ஷன், ஒரு பேமிலி, ஒரு லவ்' என நான்கு விதமான படங்கள் களத்தில் நிற்கின்றன. அக்டோபர் 14க்குள் தமிழ்நாட்டில் தியேட்டர்களில் 100 சதவீத இருக்கை அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி கிடைத்தால், இந்தப் படங்கள் நன்றாக இருந்தால் நல்ல வசூலைப் பெற வாய்ப்புள்ளது.