கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு | தள்ளிப்போன மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் | மகேஷ்பாபு, ரவீனா டாண்டன் குடும்ப வாரிசுகள் அறிமுகமாகும் படத்தில் இணைந்த ஜிவி பிரகாஷ் | வெப் தொடரான ராஜேஷ்குமார் நாவல் | கிறிஸ்துமஸ் பண்டிகையில் வெளியாகும் 'சர்வம் மாயா' | 'வாரணாசி' பட விழா செலவு 27 கோடி, ஸ்ருதிஹாசனுக்கு ஒரு கோடி | பிளாஷ்பேக்: ஒரிஜினலை வெல்ல முடியாத ரீமேக் |

சென்னை 28, சுப்ரமணியபுரம் படங்கள் மூலம் பிரபலமானவர் ஜெய். முன்வரிசை ஹீரோ பட்டியலில் இணையவில்லை என்றபோதும் சினிமாவில் தனக்கான இடத்தை தக்க வைத்து கொண்டுள்ளார். தற்போது அவர் கைவசம் அரை டஜன் படங்கள் உள்ளன.
அதில் சுசீந்திரன் இயக்கத்தில் மட்டும் குற்றமே குற்றம், சிவ சிவா என இரண்டு படங்களில் நடிக்கிறார். இதில் சிவ சிவா என்ற படத்தில் நடிப்பதோடு இசையமைப்பாளராகவும் உருவெடுத்துள்ளார் ஜெய். இதுகுறித்து அவர் இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், நான் நடிகரானது ஒரு விபத்து. காரணம் நான் இசையமைப்பாளராக வேண்டும் என்று தான் சினிமாவுக்கு வந்தேன். எதிர்பாராத விதமாக நடிகராகி விட்டேன். ஆனபோதும் இசையமைப்பாளராக வேண்டும் என்ற கனவுகளுடன் பயணித்து வந்தேன். 19 வருடங்கள் கழித்து இப்போது சிவ சிவா என்ற படத்தில் எனது கனது கனவு நனவாகியுள்ளது. இந்த படத்தில் எனது இசையில் உருவான காடமுட்டை என்ற பாடலின் முதல் சிங்கிள் தற்போது வெளியாகியுள்ளது என்று மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டுள்ளார் ஜெய்.




