லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‛கைதி -2' படத்தில் நடிக்கவில்லை! -அனுஷ்கா மறுப்பு | திரில்லர் கதையை படமாக்கும் பிரேம்குமார்! பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார்!! | கமலின் 237வது படம் டிராப் ஆகிவிட்டதா? | சண்முக பாண்டியன் நடித்துள்ள ‛படை தலைவன்' படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சுதா கொங்கரா வெளியிட்ட வீடியோ! | எம்.பி.,யான கமல்ஹாசன்; சினிமா வளர்ச்சிக்காக குரல் கொடுப்பாரா? | நல்ல கதைக்காக காத்திருக்கும் ஜோதிகா | அடுத்த படத்துல ஹீரோயின் உண்டா? சண்முக பாண்டியன் பதில் | ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழா நடக்குமா? | விஜய் மில்டன் இயக்கத்தில் இரண்டாம் முறையாக இணைந்த அம்மு அபிராமி! |
சென்னை 28, சுப்ரமணியபுரம் படங்கள் மூலம் பிரபலமானவர் ஜெய். முன்வரிசை ஹீரோ பட்டியலில் இணையவில்லை என்றபோதும் சினிமாவில் தனக்கான இடத்தை தக்க வைத்து கொண்டுள்ளார். தற்போது அவர் கைவசம் அரை டஜன் படங்கள் உள்ளன.
அதில் சுசீந்திரன் இயக்கத்தில் மட்டும் குற்றமே குற்றம், சிவ சிவா என இரண்டு படங்களில் நடிக்கிறார். இதில் சிவ சிவா என்ற படத்தில் நடிப்பதோடு இசையமைப்பாளராகவும் உருவெடுத்துள்ளார் ஜெய். இதுகுறித்து அவர் இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், நான் நடிகரானது ஒரு விபத்து. காரணம் நான் இசையமைப்பாளராக வேண்டும் என்று தான் சினிமாவுக்கு வந்தேன். எதிர்பாராத விதமாக நடிகராகி விட்டேன். ஆனபோதும் இசையமைப்பாளராக வேண்டும் என்ற கனவுகளுடன் பயணித்து வந்தேன். 19 வருடங்கள் கழித்து இப்போது சிவ சிவா என்ற படத்தில் எனது கனது கனவு நனவாகியுள்ளது. இந்த படத்தில் எனது இசையில் உருவான காடமுட்டை என்ற பாடலின் முதல் சிங்கிள் தற்போது வெளியாகியுள்ளது என்று மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டுள்ளார் ஜெய்.