ரஜினியின் 'ஜெயிலர்-2' படத்தில் இணைந்த ஹிந்தி நடிகை அபேக்ஷா போர்வல்! | 15 கிலோ எடை குறைத்த கிரேஸ் ஆண்டனி! | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் அமரன்! | சூர்யாவின் 'கருப்பு' படத்தின் கிளைமாக்ஸை மாற்றும் ஆர்.ஜே.பாலாஜி! | விக்னேஷ் சிவனை தொடர்ந்து ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் எலக்ட்ரிக் கார் வாங்கிய அட்லி! | 'பைசன் முதல் தி ஜூராசிக் வேர்ல்ட்' வரை..... இந்த வார ஓடிடி ரிலீஸ்..! | 'தி பேமிலி மேன் 3' ரிலீஸ்: பதட்டமாகவும், சந்தோஷமாகவும் இருக்கு: மனோஜ் பாஜ்பாய் | என் பெயரில் வரும் அழைப்புகள், மெசேஜ்கள் போலியானவை: தனுஷ் மானேஜர் அறிக்கை | பெண்களை இழிவாக பேசும் இயக்குனர்: திவ்யபாரதி புகார் | 'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு |

ஷங்கர் இயக்கத்தில் தமன் இசையமைப்பில் ராம் சரண், கியாரா அத்வானி, அஞ்சலி மற்றும் பலர் நடிக்கும் தெலுங்குப் படம் இரண்டு வாரங்களுக்கு முன்பு ஆரம்பமானது. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதக் கடைசியில் இருந்து ஆரம்பமாகும் எனத் தெரிகிறது. இதனிடையே, இப்படம் பற்றிய சில தகவல் வெளியாகி உள்ளது.
இப்படத்தில் 10 கோடி ரூபாய் செலவில் ஒரு ரயில் சண்டைக் காட்சியை பிரம்மாண்டமாய் படமாக்க உள்ளார்களாம். அதில் மட்டும் 100 ஸ்டன்ட் கலைஞர்கள் பங்கேற்க உள்ளதாகவும், அவர்களுடன் ராம்சரண் சண்டையிடுவது போலவும் படத்தில் காட்சி வைத்துள்ளார்களாம். இதுவரை இப்படி ஒரு சண்டைக்காட்சி வரவில்லை என்று சொல்லுமளவிற்கு அந்தக் காட்சியைப் படமாக்க ஷங்கர் திட்டமிட்டுள்ளார் என்கிறார்கள்.
படம் ஆரம்பித்து வெளிவருவதற்குள் இப்படியான பல பில்ட்-அப்கள் தொடர்ந்து வரும் என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.




