பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
தமிழ் சினிமாவில் ஒரு இடைவெளிக்குப் பிறகு வடிவேலு மீண்டும் நடிக்க வந்துள்ளார். சுராஜ் இயக்கத்தில் அவர் கதாநாயகனாக நடிக்க உள்ள படத்திற்கு 'நாய் சேகர்' என தலைப்பு வைக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், சதீஷ் நாயகனாக நடிக்கும் ஒரு படத்திற்கு 'நாய் சேகர்' என்ற பெயரை பதிவு செய்துவிட்டதால் அந்தப் பெயரை வடிவேலு படத்திற்கு வைக்க சிக்கல் உருவானது.
இந்நிலையில் சதீஷ் நடிக்கும் படத்தின் முதல் போஸ்டரை இன்று(செப்., 16) மாலை முந்தி வெளியிட்டனர். படத்திற்கு நாய் சேகர் என தலைப்பிட்டு, ஒரு நாய் உடன் சதீஷ் இருப்பது போன்ற போஸ்டரை வெளியிட்டனர். இந்த போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன், கிரிக்கெட் வீரர் சதீஷ் ஆகிய இருவரும் வெளியிட்டனர்.
சிவகார்த்திகேயன் இந்த போஸ்டரை டுவிட்டரில் வெளியிட்டு, ‛‛வடிவேலு சாரின் ரசிகனாக இந்த முதல் பார்வையை வெளியிடுவதில் மகிழ்ச்சி. சதீஷ் உங்கள் பொறுப்பு அதிகமாகிவிட்டது சிறப்பாக செய்யுங்கள். படம் மாபெரும் வெற்றி அடைய வாழ்த்துகள்'' என பதிவிட்டுள்ளார்.
இதன்மூலம் நாய் சேகர் படத்தின் தலைப்பு சதீஷிற்கு கிடைத்துள்ளது. இதனால் வடிவேலு வேறு தலைப்பை மாற்ற வேண்டிய சூழல் உருவாகி உள்ளது. அநேகமாக நாய் சேகர் என்ற பெயருடன் ‛‛மீண்டும் நாய் சேகர், நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்'' போன்ற வார்த்தைகள் இணைப்பட்டு வடிவேலு படத்தின் தலைப்பு வெளியாகலாம் என தெரிகிறது.