ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? | தோத்துகிட்டேபோனா எப்படி : எப்பதான் ஜெயிக்கிறது | தாத்தா பெயரை காப்பாற்றுவேன்: நாகேஷ் பேரன் உருக்கம் | எனது முத்தக் காட்சியை எப்படி நீக்கலாம் : பாலிவுட் நடிகை கண்டனம் | ரஞ்சித், ஆர்யா படப்பிடிப்பில் சண்டை கலைஞர் மரணம் | ஆள் வச்சி அடிச்ச மாதிரி டார்ச்சர் இருந்தது: 'தலைவன் தலைவி' படப்பிடிப்பு அனுபவம் குறித்து விஜய் சேதுபதி |
பிரபல தெலுங்கு நடிகர் சாய் தரம் தேஜ். நடிகர் சிரஞ்சீவியின் சகோதரி மகனான இவர், அங்கு வளர்ந்து வரும் இளம் நடிகராக உள்ளார். ரே, சுப்ரமணியம் பார் சேல், தேஜ் ஐ லவ் யூ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஐதராபாத்தில் உள்ள கேபிள் பாலத்தில் ஸ்போர்ட்ஸ் பைக்கில் இன்று இவர் ரைடு சென்றுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த பைக் விபத்திற்குள்ளானது. இதில் பலத்த அடிபட்ட சாய், சுயநினைவின்றி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை நடக்கிறது. தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். இந்த நிகழ்வு சாய் தரம் தேஜ், சிரஞ்சீவி குடும்பத்தினர் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே சாய் சரம் தேஜ் விபத்தில் சிக்கிய செய்தியை கேட்டதுமே அவரது தாய் மாமாக்களில் ஒருவரும், நடிகருமான பவன் கல்யாண் உள்ளிட்ட உறவினர்கள் மருத்துவமனைக்கு நேரில் சென்று அவரது உடல்நிலை பற்றி கேட்டறிந்தார். திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் சாய் தரம் தேஜ் விரைந்து குணமாக கடவுளை வேண்டுவதாக சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.