லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
கன்னடத்தில் தயாராகி வரும் படம் விக்ராந்த் ரோணா. கிச்சா சுதீப், நிரூப் பந்தாரி, நீட்டா அசோக், ஜாக்குலின் பெர்ணாண்டஸ், உள்பட பலர் நடிக்கிறார்கள். அனூப் பண்டாரி இயக்குகிறார், ஜாக் மஞ்சுநாத் மற்றும் ஷாலினி மஞ்சுநாத் தயாரிக்கிறார்கள்.
சுமார் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் இந்த படம் பேண்டஸி த்ரில்லர் வகை படமாகும். பல வருடங்களுக்கு பிறகு கன்னடத்தில் உருவாகும் 3டி தொழில்நுட்ப படம். கன்னடம் தவிர்த்து 14 மொழிகளில் வெளியாகிறது. படத்தின் 3டி பணிகளுக்கென்றே பல கோடி செலவு செய்கிறார்கள்.
இதுகுறித்து படத்தின் இயக்குனர் அனூப் பண்டாரி கூறியதாவது: விக்ராந்த் ரோணா ஒரு மர்மம் நிறைந்த கதாபாத்திரம். இந்த திரைப்படத்தை உருவாக்கும் போது, இது மிகப்பெரியபாத்திரம் என்பதை புரிந்து கொண்டேன். சுதீப் சார் இதில் கதாநாயகனாக வந்த பிறகு, அப்பாத்திரத்தின் பலம் இன்னும் அதிகமாகிவிட்டது. இப்படம் அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக இருக்கும். என்றார்.