புதிய விதிகளை அமல்படுத்திய ஆஸ்கர் அகாடமி | என்ன சமந்தா தனது முதல் இரண்டு படங்கள் பற்றி இப்படி சொல்லிட்டார்.... | 'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் | சுவர் ஏறி குதித்து குழந்தையை காப்பாற்றிய திஷா பதானியின் தங்கை : குவியும் பாராட்டுக்கள் | 18வது திருமண நாளில் 'பேமிலி' புகைப்படத்தைப் பகிர்ந்த ஐஸ்வர்யா ராய் | மகேஷ்பாபுவுக்கு நேரில் ஆஜராக அமலாக்கத் துறை நோட்டீஸ் | கதை நாயகனாக நடிக்கும் 'காக்கா முட்டை' விக்னேஷ் | 'நிழற்குடையில்' கதை நாயகியாக நடிக்கும் தேவயானி | கால் பாதத்தை டீ ஸ்டாண்ட் ஆக மாற்றிய மம்முட்டி ; வைரலாகும் புகைப்படம் |
தமிழக சட்டசபையில் நேற்று செய்தி விளம்பரத்துறைக்கான கொள்கை குறிப்பை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டிருப்பதாவது: தமிழ்நாடு அரசால் 1968ம் ஆண்டுமுதல் திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக திரைப்படம் மற்றும் சின்னத்திரை விருதுகள் வழங்கப்படவில்லை. இவைகள் விரைவில் வழங்கப்படும். திரைப்பட படப்பிடிப்புகளுக்கான அனுமதியை இனி இணையதளங்கள் மூலமாக வழங்கி நடைமுறைகள் எளிமையாக்கப்படும். அரசு திரைப்படக் கல்லூரி மாணவர்களின் குறும்படங்களுக்கும் விருதுகள் வழங்கப்படும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.