என் கதையை காப்பி அடித்தவர்கள் உருப்படவில்லை: எழுத்தாளர் ராஜேஷ்குமார் கோபம் | நடிகை கடத்தல் வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு | ராம்சரணுடன் ஆர்வமாக புகைப்படம் எடுத்த அமெரிக்க அதிபரின் மகன் | எதிர்மறை விமர்சனம் எதிரொலி : விலாயத் புத்தா படத்தில் 15 நிமிட காட்சிகள் நீக்கம் | ஜோசப் ரீமேக்கை பார்க்காமலேயே தர்மேந்திரா மறைந்து விட்டார் : மலையாள இயக்குனர் வருத்தம் | ஆஸ்கர் நாமினேஷனில் 'மகா அவதார் நரசிம்மா' | நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் |

கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் கடைசியில் சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டன. கடந்த ஆகஸ்ட் மாதம் கடைசியில் மீண்டும் சினிமா தியேட்டர்களைத் திறந்தார்கள். இரண்டு வாரங்களாக முன்னணி நடிகர்களின் படங்கள் எதுவும் இல்லாத காரணத்தால் தியேட்டர்களில் ரசிகர்களின் வருகை மிகவும் குறைவாகவே இருந்தது. வேற்று மொழிப் படங்களுக்கு மிகக் குறைந்த அளவில் ரசிகர்கள் வந்தனர்.
இந்த வாரம் இரண்டு முக்கிய படங்கள் வெளியாக உள்ளதால் தியேட்டர்கள் மீண்டும் பழையபடி சூடு பிடிக்க வாய்ப்பு உள்ளது. செப்டம்பர் 9ம் தேதி விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன், ஜெகபதி பாபு மற்றும் பலர் நடித்துள்ள 'லாபம்' படம் தியேட்டர்களில் வெளியாகிறது. அதற்கு மறுநாள் வினாயகர் சதுர்த்தி அன்று அரவிந்த்சாமி, கங்கனா ரணவத் மற்றும் பலர் நடித்துள்ள, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான 'தலைவி' வெளியாக உள்ளது.
இந்த இரண்டு படங்களும் தியேட்டர்களுக்கு மக்களை வரவழைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் தியேட்டர்களுக்கு வரும் மக்களைக் குறைக்கும் விதமாக செப்டம்பர் 10ம் தேதி ஓடிடி தளத்தில் சந்தானம் நடித்துள்ள 'டிக்கிலோனா' படமும், அன்றைய தினம் மாலை டிவியில் நேரடி வெளியீடாக விஜய் சேதுபதி நடித்துள்ள 'துக்ளக் தர்பார்' படமும் வெளியாகிறது.
எப்படியோ தியேட்டர்களில் இரண்டு, ஓடிடி, டிவியில் இரண்டு படங்கள் என இந்த வாரம் புதுப் படங்களின் ரிலீஸ் வாரமாக அமையப் போகிறது.