பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கங்கனா ரணாவத், அரவிந்த்சாமி உள்பட பலர் நடித்துள்ள படம் தலைவி. முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகியுள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் தயாராகியுள்ளது. வருகிற செப்டம்பர் 10-ந்தேதி இப்படம் வெளி யாகிறது.
அதனால் தற்போது மூன்று மொழிகளிலும் தலைவி படத்தை பிரமோசன் செய்யும் பணிகளில் இறங்கியுள்ளார் கங்கனா ரணாவத். நேற்று முன்தினம் இப்படத்தின் பிரமோசனுக்காக சென்னை வந்த அவர், சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து இங்கு நடந்த பிரஸ்மீட்டில் பங்கேற்றார்.
அதையடுத்து நேற்று ஐதராபாத்தில் நடைபெற்ற பிரமோசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கங்கனா, எனக்கு இந்த ரோலை கொடுத்ததற்காக விஜயேந்திர பிரசாத்துக்கு கடமைப்பட்டிருக்கிறேன். என்னை நம்பியதற்கு அவருக்கு எனது நன்றி. ஒரு பெண்ணை மையப்படுத்திய படத்தில் நடித்த அரவிந்த்சாமி பெருந்தன்மையானவர் என்று கூறியுள்ள கங்கனா, நான் பணியாற்றியதில் மிகவும் திறமையான இயக்குனர் ஏ.எல்.விஜய் என்றும் தெரிவித்துள்ளார்.