‛கலைமாமணி' பட்டம் பெற்ற நாட்டுப்புற பாடகி கொல்லங்குடி கருப்பாயி காலமானார் | டாப் இயக்குனர்களுடனான கூட்டணி சரிவு : கவனிப்பாரா கமல்ஹாசன் ? | ரஜிஷா விஜயனுக்கு கை கொடுக்கும் வருடமாக 2025 அமையுமா? | ஜோதிகா பட பெண் இயக்குனரின் படத்திற்கு கேரள அரசு வரி விலக்கு | பஹத் பாசில் பட தேசிய விருது கதாசிரியரின் இயக்கத்தில் நடிக்கும் 'ஜென்டில்மேன் 2' ஹீரோ | 'காந்தாரா-2' படப்பிடிப்பில் மீண்டும் ஒரு மலையாள நடிகர் மரணம் | பஹத் பாசில் - எஸ்ஜே சூர்யா படம் டிராப் ஏன்? மனம் திறந்த இயக்குனர் விபின் தாஸ் | விக்ரம் 63 படம் கைவிடப்பட்டதா? | கூலி, குபேரா படங்கள் குறித்து நாகார்ஜுனா வெளியிட்ட தகவல் | அட்லி படத்தை அடுத்து மேலும் 2 புதிய படங்களில் கமிட்டான அல்லு அர்ஜுன் |
'பிக் பாஸ்' ரியாலிட்டி ஷோ தமிழ், தெலுங்கில் ஒரே ஆண்டில் 2017ம் ஆண்டு ஆரம்பமானது. தெலுங்கில் முதல் சீசனை ஜுனியர் என்டிஆர், இரண்டாவது சீசனை நானி ஆகியோர் தொகுத்து வழங்கினர். கடந்த மூன்றாவது, நான்காவது சீசன்களை நாகார்ஜுனா தொகுத்து வழங்கினார். இந்த வருடத்தின் ஐந்தாவது சீசனையும் நாகார்ஜுனாவே தொகுத்து வழங்குகிறார்.
நாளை செப்டம்பர் 5 மாலை 6 மணிக்கு இந்த 5வது சீசனின் முதல் எபிசோடு ஒளிபரப்பாக உள்ளது. நாளை பங்கேற்கும் போட்டியாளர்களின் அறிமுக நிகழ்ச்சி ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன் ஒளிபரப்பாக உள்ளது. அதன்பின் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கும், சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இரவு 9 மணிக்கும் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும். கடந்த நான்காவது சீசன் அதிகப் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு ரேட்டிங்கிலும் சாதனை படைத்துள்ளது. அதை முறியடிக்கும் விதத்தில் ஐந்தாவது சீசனை உருவாக்க திட்டமிட்டுள்ளார்களாம்.
இந்த சீசன் குறித்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய நாகார்ஜுனா, “ரசிகர்களுக்கும் நேயர்களுக்கும் மகிழ்ச்சியுடன், சிறந்த பொழுதுபோக்கைத் தருவதே எங்களது நோக்கம். ஒரு கலைஞனாக, போட்டியாளர்களின் உண்மையான உணர்வுகளை எடுத்துச் செல்ல எதிர்நோக்கியுள்ளேன். அதன் மூலம் டிவி பார்க்கும் நேயர்களும் அதைப் புரிந்து கொள்ள முடியும்,” என்று தெரிவித்துள்ளார்.
கடந்த சீசனில் கடும் போட்டியும், சண்டையும் தெலுங்கு பிக் பாஸில் இருந்தது. இந்த ஆண்டும் அதே அளவிற்கு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.