புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெறுகிறது. டாட்டியா மாவட்டத்தின் ஓர்ச்சா, குவாலியர் கோட்டைகளில் நடந்து வந்த படப்பிடிப்பு தற்போது இந்தோர் மாவட்டத்தின் ஹரிகேஷ்வரில் நடந்து வருகிறது. நர்மதா நதிக் கரையிலுள்ள ராணி அகில்யா பாய் கோட்டை, அரண்மனை மற்றும் சிவன் கோயில்களிலும் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
கார்த்தி மற்றும் ரகுமானுடன் நடிகை த்ரிஷா நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. நர்மதா நதியின் கரைகளில் பல சிவலிங்கங்கள் நந்தியுடன் அமைந்துள்ளன. இந்த சிலைகளுக்கு நடுவில் த்ரிஷா காலில் செருப்பு அணிந்து நடித்துள்ளார்.
இது சிவலிங்கங்களையும், இந்துக்களையும் அவமானப்படுத்துதாகும் என்றும் அதனால் நடிகை த்ரிஷா மீதும், இயக்குனர் மணிரத்னம் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து வித்யா மண்டல் அமைப்பின் தலைவர் தினேஷ் கட்டோர் ஹரிகேஷ்வர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.