நயன்தாராவுடன் இணையும் படத்திற்காக போட்டோஷூட் நடத்திய சிரஞ்சீவி! | தனுஷின் 'குபேரா' படத்தை 50 கோடிக்கு கைப்பற்றிய அமேசான் பிரைம்! | நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் சூர்யாவின் 'ரெட்ரோ' | 'கொம்பு சீவி' படத்திற்காக மதுரை வட்டார தமிழில் டப்பிங் பேசும் சண்முக பாண்டியன்! | விஜய்சேதுபதி நடித்துள்ள 'ஏஸ்' படத்தின் சென்சார் - ரன்னிங் டைம் வெளியானது! | ரவி மோகனிடம் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கேட்கும் ஆர்த்தி ரவி | ரோல் மாடலுக்கு முத்தமிட்டு, மண்டியிட்டு மரியாதை செலுத்திய அஜித் | 'விக்ரம் 63' படத்தின் கதாநாயகி யார்? | வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க சூரி என்ன சொன்னார் தெரியுமா? | இசையமைப்பாளர் சாம் சிஎஸ் மீது மோசடி புகார் |
இந்தியன் 2 படத்தை கிடப்பில் போட்டு விட்டு ராம்சரண் மற்றும் ரன்வீர் சிங் நடிக்கும் படங்களை இயக்கப் போவதாக முடிவெடுத்த ஷங்கருக்கு பல வழிகளில் இருந்தும் சிக்கல்கள் எற்பட்டது. இந்தியன்-2 படத்தை இயக்கி முடித்த பிறகுதான் வேறு படத்தை இயக்க வேண்டும் என்று லைகா நிறுவனம் நீதிமன்றம் சென்றது. அதையடுத்து ரன்வீர்சிங் நடிக்கும் படம் அந்நியன் ஹிந்தி ரீமேக் என்றதால், அந்த படத்தை தயாரித்த ஆஸ்கர் பிலிம்சும் தங்களிடம் அனுமதி பெறாமல் ரீமேக் செய்யக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தது.
அதன்பிறகு ஒருவழியாக அந்த இரண்டு சிக்கல்களையும் கடந்து ராம்சரண் நடிக்கும் படத்தின் ஆரம்ப கட்ட பணிகளை தொடங்கினார் ஷங்கர். இந்த நிலையில் தற்போது அவர் இயக்கப்போகும் அந்த கதை தனக்கு சொந்தமானது என்று கார்த்திக் சுப்பராஜின் உதவியாளர் செல்வமுத்து என்பவர் தமிழ் எழுத்தாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். அதையடுத்து தற்போது எழுத்தாளர் சங்கம் டைரக்டர் ஷங்கர் மற்றும் உதவி இயக்குனர் செல்வமுத்து ஆகிய இருவரின் ஸ்கிரிப்டுகளை ஆராய்ந்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த புதிய பிரச்சினையின் முடிவு என்னவாக இருக்கப்போகிறதோ? வெயிட் பண்ணி பார்ப்போம்.