ரஜினியின் 'ஜெயிலர்-2' படத்தில் இணைந்த ஹிந்தி நடிகை அபேக்ஷா போர்வல்! | 15 கிலோ எடை குறைத்த கிரேஸ் ஆண்டனி! | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் அமரன்! | சூர்யாவின் 'கருப்பு' படத்தின் கிளைமாக்ஸை மாற்றும் ஆர்.ஜே.பாலாஜி! | விக்னேஷ் சிவனை தொடர்ந்து ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் எலக்ட்ரிக் கார் வாங்கிய அட்லி! | 'பைசன் முதல் தி ஜூராசிக் வேர்ல்ட்' வரை..... இந்த வார ஓடிடி ரிலீஸ்..! | 'தி பேமிலி மேன் 3' ரிலீஸ்: பதட்டமாகவும், சந்தோஷமாகவும் இருக்கு: மனோஜ் பாஜ்பாய் | என் பெயரில் வரும் அழைப்புகள், மெசேஜ்கள் போலியானவை: தனுஷ் மானேஜர் அறிக்கை | பெண்களை இழிவாக பேசும் இயக்குனர்: திவ்யபாரதி புகார் | 'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு |

இந்தியன் 2 படத்தை கிடப்பில் போட்டு விட்டு ராம்சரண் மற்றும் ரன்வீர் சிங் நடிக்கும் படங்களை இயக்கப் போவதாக முடிவெடுத்த ஷங்கருக்கு பல வழிகளில் இருந்தும் சிக்கல்கள் எற்பட்டது. இந்தியன்-2 படத்தை இயக்கி முடித்த பிறகுதான் வேறு படத்தை இயக்க வேண்டும் என்று லைகா நிறுவனம் நீதிமன்றம் சென்றது. அதையடுத்து ரன்வீர்சிங் நடிக்கும் படம் அந்நியன் ஹிந்தி ரீமேக் என்றதால், அந்த படத்தை தயாரித்த ஆஸ்கர் பிலிம்சும் தங்களிடம் அனுமதி பெறாமல் ரீமேக் செய்யக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தது.
அதன்பிறகு ஒருவழியாக அந்த இரண்டு சிக்கல்களையும் கடந்து ராம்சரண் நடிக்கும் படத்தின் ஆரம்ப கட்ட பணிகளை தொடங்கினார் ஷங்கர். இந்த நிலையில் தற்போது அவர் இயக்கப்போகும் அந்த கதை தனக்கு சொந்தமானது என்று கார்த்திக் சுப்பராஜின் உதவியாளர் செல்வமுத்து என்பவர் தமிழ் எழுத்தாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். அதையடுத்து தற்போது எழுத்தாளர் சங்கம் டைரக்டர் ஷங்கர் மற்றும் உதவி இயக்குனர் செல்வமுத்து ஆகிய இருவரின் ஸ்கிரிப்டுகளை ஆராய்ந்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த புதிய பிரச்சினையின் முடிவு என்னவாக இருக்கப்போகிறதோ? வெயிட் பண்ணி பார்ப்போம்.




