துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
நடிகை மீரா மிதுன் சமூக வலைத்தளத்தில் பட்டியலின மக்கள் பற்றி அவதூறாக பேசியதாக வன்கொடுமை சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மீரா மிதுன் தன்னைப் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகள் கூறி வருவதாக ஜோ மைக்கல் பிரவீன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் மீரா மிதுனை மீண்டும் கைது செய்தனர். இந்த வழக்கில் மீரா மிதுனுக்கு கோர்ட் ஜாமீன் வழங்கியது.
இந்த நிலையில் மீரா மிதுனுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கில் போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர். 2019ம் ஆண்டு மீரா மிதுன் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தினார். இந்த சந்திப்புக்கு ஓட்டல் நிர்வாகி எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக மீரா மிதுன் மீது ஓட்டல் நிர்வாகி புகார் கொடுத்திருந்தார். இந்த புகாரின் பேரில் எழும்பூர் போலீஸார் மீரா மிதுன் மீது வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் போலீஸார் நேற்று நீதிமன்றத்தில் 30 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர். இது சம்பந்தமாக நாளை நீதிமன்றத்தில் மீரா மிதுனை போலீஸார் ஆஜர்ப்படுத்த உள்ளனர். தொடர்ந்து 3 வழக்குகள் மீரா மிதுன் மீது பதிவு செய்யப்பட்டிருப்பதால், அவர் மீது குண்டர் சட்டம் பாயலாம் என்று தெரிகிறது.