முன்கூட்டியே ஜன., 10ல் ‛பராசக்தி' ரிலீஸ் : விஜய் படத்துடன் நேரடியாக மோதும் சிவகார்த்திகேயன் | சத்ய சாய்பாபாவின் அற்புதங்களை சொல்லும் ‛அனந்தா' : ஜன.,20 முதல் ஓடிடியில் வெளியீடு | 'ரேஸ் நடிப்பு அல்ல.. ரியல்' : அஜித்தின் புதிய வீடியோ வைரல் | ஹிந்தியில் திரிஷ்யம் 3 ரிலீஸ் தேதியை அறிவித்த அஜய் தேவ்கன் | முதல் படம் வெளியாகும் முன்பே சிறை இயக்குனருக்கு கார் பரிசு | நடிகர் மாதவன் பெயர், புகைப்படத்தை அனுமதியின்றி பயன்படுத்த தடை | போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஷைன் டாம் சாக்கோ விடுவிப்பு | துபாய் பயணத்தை ரத்து செய்துவிட்டு நடிகர் சீனிவாசனுக்கு அஞ்சலி செலுத்திய பார்த்திபன் | அவதார் அடுத்த பாகம் பற்றி இப்ப கேட்காதீங்க : ஜேம்ஸ் கேமரூன் | சிவகார்த்திகேயன் தயாரிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வீடியோ வெளியானது! |

பட்டியல் இன மக்களைப் பற்றி தவறாக விமர்சனம் செய்து வீடியோவை வெளியிட்ட நடிகை மீரா மிதுனை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் . தலைமறைவாக இருந்த மீரா மிதுனை கேரளாவில் கைது செய்த போலீசார் அதையடுத்து சென்னை கொண்டு வந்து சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தினர். அவரிடத்தில் விசாரணை நடத்திய நீதிபதி அவரை வருகிற 27-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.
அதன்பிறகு தற்போது சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் மீராமிதுன். மேலும் நீதிமன்றத்தில் தொடர்ந்து விசாரணை செய்துவரும் போலீசாரிடம் அவர் அடிக்கடி மாற்றி மாற்றி பேசி வருவதால் மன நல மருத்துவரை கொண்டு விசாரணை தொடங்க திட்டமிட்டு உள்ளார்கள்.
இந்நிலையில் போதை மருந்து உள்ளிட்ட பொருட்களை வினியோகம் செய்து வந்த மீரா மிதுனின் தோழி ஒருவரும் விரைவில் கைது செய்யப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதோடு தற்போது நடிகை மீரா மிதுன் சர்ச்சைக்குரிய வீடியோக்களை வெளியிட்டு வந்த அவரது யூடியூப் சேனலை முடக்கவும் சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.