என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
பட்டியல் இன மக்களைப் பற்றி தவறாக விமர்சனம் செய்து வீடியோவை வெளியிட்ட நடிகை மீரா மிதுனை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் . தலைமறைவாக இருந்த மீரா மிதுனை கேரளாவில் கைது செய்த போலீசார் அதையடுத்து சென்னை கொண்டு வந்து சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தினர். அவரிடத்தில் விசாரணை நடத்திய நீதிபதி அவரை வருகிற 27-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.
அதன்பிறகு தற்போது சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் மீராமிதுன். மேலும் நீதிமன்றத்தில் தொடர்ந்து விசாரணை செய்துவரும் போலீசாரிடம் அவர் அடிக்கடி மாற்றி மாற்றி பேசி வருவதால் மன நல மருத்துவரை கொண்டு விசாரணை தொடங்க திட்டமிட்டு உள்ளார்கள்.
இந்நிலையில் போதை மருந்து உள்ளிட்ட பொருட்களை வினியோகம் செய்து வந்த மீரா மிதுனின் தோழி ஒருவரும் விரைவில் கைது செய்யப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதோடு தற்போது நடிகை மீரா மிதுன் சர்ச்சைக்குரிய வீடியோக்களை வெளியிட்டு வந்த அவரது யூடியூப் சேனலை முடக்கவும் சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.