எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் | கேன்ஸில் பிரதிபலித்த ‛சிந்தூர்' : பார்வையாளர்களை கவர்ந்த ஐஸ்வர்யா ராய், அதிதி ராவ் | காந்தாரா சாப்டர் 1 ரிலீஸ் தள்ளிவைப்பா... : ரிஷப் ஷெட்டி பதில் | குத்துப்பாடலில் சர்ச்சையான வரிகளை நீக்க சொன்ன பவன் கல்யாண் ; மரகதமணி தகவல் | பண மோசடி வழக்கில் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' தயாரிப்பாளர்களின் கோரிக்கை மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | ஏகப்பட்ட நிபந்தனைகள் விதித்த தீபிகா படுகோனே : வெளியேறவில்லை.. வெளியேற்றப்பட்டார் | போலீஸ் பாதுகாப்பை மீறி சல்மான் கான் வீட்டுக்கு செல்ல முயன்ற பெண் கைது | மைசூர் சாண்டல் சோப் தூதராக தமன்னா நியமனம் : வலுக்கும் எதிர்ப்பு |
தமிழ் சினிமாவில் 2009ம் ஆண்டு வெளிவந்த 'ஆயிரத்தில் ஒருவன்' படம் வெளியீட்டின் போது வியாபார ரீதியாகப் பெரிதாக பேசப்படவில்லை என்றாலும, விமர்சன ரீதியாக பெரிதும் பேசப்பட்டது.
செல்வராகவன் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ்குமார் இசையில், கார்த்தி, ஆன்ட்ரியா, ரீமா சென், பார்த்திபன் மற்றும் பலர் நடித்த அந்தப் படம் ஒரு 'அட்வென்ச்சர்' படமாக அமைந்தது. படம் வெளியாகி இத்தனை வருடங்களாகியும் அந்தப் படத்தை இப்போதும் சிலாகித்துப் பேசி வருகிறார்கள் ரசிகர்கள்.
அதைப் புரிந்து கொண்டு தான் 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தின் இரண்டாம் பாகத்தைப் பற்றிய அறிவிப்பையும் இந்த வருடப் புத்தாண்டில் அறிவித்தார் செல்வராகவன். தனுஷ் நடிக்க 2024ம் ஆண்டு அந்தப் படம் வரும் என தெரிவித்துள்ளார்கள்.
இந்நிலையில் இன்று திடீரென 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தின் முதல் பாகத்தைப் பற்றி டுவிட்டரில் ஒரு பதிவிட்டுள்ளார் செல்வராகவன். அதில், “ஆயிரத்தில் ஒருவன்' படத்தின் உண்மையான பட்ஜெட் 18 கோடி தான். ஆனால், அதை ஒரு மெகா பட்ஜெட் படம் என உயர்த்திக் காட்டுவதற்காக 32 கோடி பட்ஜெட் என அறிவிக்க முடிவு செய்தோம். என்ன ஒரு முட்டாள்தனம். படத்தின் உண்மையான பட்ஜெட்டை படம் வசூல் செய்திருந்தாலும், அது ஆவரேஜ் வசூல் என்று தான் சொல்லப்பட்டது. என்ன முரண்பாடு இருந்தாலும் பொய் சொல்லக் கூடாது என்று கற்றுக் கொண்டேன்,” என 12 வருட வரலாற்றைக் கிளறிவிட்டுள்ளார்.
செல்வராகவன் பதிவின்படி பார்த்தால் சினிமாவில் பலரும் பொய்யான பட்ஜெட்டை சொல்லுவார்கள் என்ற உண்மை வெளிப்படுகிறது. அந்தப் பொய்க்கு அப்போது செல்வராகவனும் உடந்தையாகத்தான் இருந்துள்ளார். இப்போது, பொய் சொல்லக் கற்றுக் கொண்டேன் என்று சொல்வதற்கான அவசியம் என்னவென்று தெரியவில்லை.
இனி, ஒரு படத்தின் பட்ஜெட் 500 கோடி என்று யாராவது அளந்துவிட்டால், அதன் உண்மையான பட்ஜெட் 280 கோடிதான் இருக்கும் என சாதாரண ரசிகர்களும் கணக்கு போட்டுக் கொள்வார்கள்.