மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் காஜல் அகர்வால். திருமணம் முடிந்த பின்னும் இப்போது நடிகைகளுக்கான இமேஜ் சற்றும் குறைவதில்லை. அதை ஏற்கெனவே சமந்தா உள்ளிட்ட சில நடிகைகள் நிரூபித்துவிட்டார்கள்.
தொடர்ந்து படப்பிடிப்புகளில் கலந்து கொண்டதால் சிறிது ஓய்வெடுக்க வேண்டும் என்று காஜல் அகர்வால் ஏற்கெனவே சொல்லியிருந்தார். அதன்படி தற்போது ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார் போலிருக்கிறது.
நீச்சல் உடையில் நீச்சல் குளத்தில் மகிழ்ச்சி பொங்க குளித்துக் கொண்டிருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்து தத்துவமாகவும் ஒரு பதிவிட்டுள்ளார்.
“மகிழ்ச்சி என்பது உங்களது சொந்த அலைகளை உருவாக்குவது... ஒரு நல்ல மனநிலையை உருவாக்க ஒரே ஒரு நீச்சல் போதும்” என்பதுதான் காஜல் அகர்வால் சொன்ன தத்துவம்.
காஜல் அகர்வால் நீச்சல் உடை புகைப்படத்தை மட்டும் பார்க்காமல் அவர் தத்துவத்தையும் படித்து ரசியுங்கள்.