ஹாட்ரிக் வெற்றி : மகிழ்ச்சியில் சிம்ரன் | ஜெயிலர் 2வில் யோகிபாபு | என்னை கொல்ல சதி நடக்குது: ஜாக்குவார் தங்கம் அலறல் | இடியாப்ப சிக்கலில் விஜயகாந்த் மகன் திரைப்படம் | நயன்தாராவுடன் இணையும் படத்திற்காக போட்டோஷூட் நடத்திய சிரஞ்சீவி! | தனுஷின் 'குபேரா' படத்தை 50 கோடிக்கு கைப்பற்றிய அமேசான் பிரைம்! | நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் சூர்யாவின் 'ரெட்ரோ' | 'கொம்பு சீவி' படத்திற்காக மதுரை வட்டார தமிழில் டப்பிங் பேசும் சண்முக பாண்டியன்! | விஜய்சேதுபதி நடித்துள்ள 'ஏஸ்' படத்தின் சென்சார் - ரன்னிங் டைம் வெளியானது! | ரவி மோகனிடம் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கேட்கும் ஆர்த்தி ரவி |
தமிழ் திரைப்படங்களில் சிறிய வேடங்களில் நடித்து வந்தவர் துணை நடிகை மீரா மிதுன். அழகி போட்டி நடத்துவதாக கூறி மோசடி செய்ததாக அவர் மீது ஒரு புகார் உள்ளது. இதேப்போல சென்னை வியாசர்பாடி எம்கேபி நகரை சேர்ந்த ஜோ மைக்கேல் பிரவீன் என்பவர் கடந்த செப்டம்பர் மாதம் எம்கேபி நகர் காவல் நிலையத்தில் மீரா மிதுன் மீது ஒரு புகார் கொடுத்திருந்தார். அந்த புகாரில் மீரா மிதுன் எனது படத்தை பயன்படுத்தி என்னை பற்றி சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பி வருகிறார் என்று கூறியிருந்தார்.
இந்த புகார் குறித்து விசாரிக்க தற்போது சிறையில் இருக்கும் மீரா மிதுனை போலீஸ் காவலில் எடுக்க எம்கேபி நகர் போலீசார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். பட்டியல் இனத்தவர் பற்றிய அவதூறாக பேசிய வழக்கில் தற்போது மீரா மிதுன் சிறையில் இருக்கிறார். அவரது ஜாமீன் மனுவை நீதிமன்றம் நிராகரித்திருக்கிறது. இந்த வழக்கில் மீரா மிதுனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க குற்றபிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர். இரண்டும் ஒரே காலகட்டத்தில் நடக்கலாம் என்று போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது.