துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி |
மறைந்த எழுத்தாளர் கல்கியின் "பொன்னியின் செல்வன்" நாவல், தற்போது அதே பெயரில் திரைப்படமாக உருவாகி வருகிறது. மணிரத்னம் இயக்கும் இப்படம் இருபாகங்களாக உருவாகி வருகிறது. இப்படத்தில் ஐஸ்வர்யா ராய், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், சரத்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகும் இப்படத்திற்கு ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்கிறார்
ஏற்கனவே பாண்டிச்சேரி, ஐதராபாத் ஆகிய பகுதியில் முடிந்த நிலையில் தற்போது மத்திய பிரதேசதில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. முதலில் உர்ச்சா மற்றும் குவாலியர் பகுதிகளில் நடைபெற்று வந்த படப்படிப்பு நிறைவுபெற்றுள்ள நிலையில் அடுத்ததாக மகேஸ்வர் நகருக்கு படக்குழு சென்றுள்ளது. அங்கு நர்மதை நதி கரையில் உள்ள பழைவாய்ந்த அகில்யா கோட்டையில் வந்தியத்தேவன் - குந்தவை கதாபாத்திரங்களாக நடிக்கும் கார்த்தி மற்றும் த்ரிஷாவின் காதல் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.
இந்த படப்பிடிப்பு சில நாட்களில் முடியவுள்ள நிலையில் விரைவில் படக்குழு சென்னை திரும்பவுள்ளனர். அதன்பின்னர் கார்த்தி நடிக்கும் சில காட்சிகளை சத்தியமங்கலம் காட்டுப்பகுதியில் படமாக்கப்படவுள்ளது.