தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் | விஜய் மில்டன் படத்தில் சுனில் | 'முத்த மழை' சர்ச்சை பற்றி எதுவும் பேசாத தீ | ஒன்றரை லட்ச ரூபாய் 'டி ஷர்ட்' அணிந்த மகேஷ்பாபு | முன்னணி இயக்குனர்களின் தோல்வி : வருத்தத்தில் தமிழ் சினிமா | பிளாஷ்பேக்: 'சிறை'யின் குறைகள் | பிளாஷ்பேக் : ஆணாக அறிமுகமான விஜய நிர்மலா |
மறைந்த எழுத்தாளர் கல்கியின் "பொன்னியின் செல்வன்" நாவல், தற்போது அதே பெயரில் திரைப்படமாக உருவாகி வருகிறது. மணிரத்னம் இயக்கும் இப்படம் இருபாகங்களாக உருவாகி வருகிறது. இப்படத்தில் ஐஸ்வர்யா ராய், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், சரத்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகும் இப்படத்திற்கு ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்கிறார்
ஏற்கனவே பாண்டிச்சேரி, ஐதராபாத் ஆகிய பகுதியில் முடிந்த நிலையில் தற்போது மத்திய பிரதேசதில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. முதலில் உர்ச்சா மற்றும் குவாலியர் பகுதிகளில் நடைபெற்று வந்த படப்படிப்பு நிறைவுபெற்றுள்ள நிலையில் அடுத்ததாக மகேஸ்வர் நகருக்கு படக்குழு சென்றுள்ளது. அங்கு நர்மதை நதி கரையில் உள்ள பழைவாய்ந்த அகில்யா கோட்டையில் வந்தியத்தேவன் - குந்தவை கதாபாத்திரங்களாக நடிக்கும் கார்த்தி மற்றும் த்ரிஷாவின் காதல் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.
இந்த படப்பிடிப்பு சில நாட்களில் முடியவுள்ள நிலையில் விரைவில் படக்குழு சென்னை திரும்பவுள்ளனர். அதன்பின்னர் கார்த்தி நடிக்கும் சில காட்சிகளை சத்தியமங்கலம் காட்டுப்பகுதியில் படமாக்கப்படவுள்ளது.