ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
மறைந்த எழுத்தாளர் கல்கியின் "பொன்னியின் செல்வன்" நாவல், தற்போது அதே பெயரில் திரைப்படமாக உருவாகி வருகிறது. மணிரத்னம் இயக்கும் இப்படம் இருபாகங்களாக உருவாகி வருகிறது. இப்படத்தில் ஐஸ்வர்யா ராய், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், சரத்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகும் இப்படத்திற்கு ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்கிறார்
ஏற்கனவே பாண்டிச்சேரி, ஐதராபாத் ஆகிய பகுதியில் முடிந்த நிலையில் தற்போது மத்திய பிரதேசதில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. முதலில் உர்ச்சா மற்றும் குவாலியர் பகுதிகளில் நடைபெற்று வந்த படப்படிப்பு நிறைவுபெற்றுள்ள நிலையில் அடுத்ததாக மகேஸ்வர் நகருக்கு படக்குழு சென்றுள்ளது. அங்கு நர்மதை நதி கரையில் உள்ள பழைவாய்ந்த அகில்யா கோட்டையில் வந்தியத்தேவன் - குந்தவை கதாபாத்திரங்களாக நடிக்கும் கார்த்தி மற்றும் த்ரிஷாவின் காதல் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.
இந்த படப்பிடிப்பு சில நாட்களில் முடியவுள்ள நிலையில் விரைவில் படக்குழு சென்னை திரும்பவுள்ளனர். அதன்பின்னர் கார்த்தி நடிக்கும் சில காட்சிகளை சத்தியமங்கலம் காட்டுப்பகுதியில் படமாக்கப்படவுள்ளது.