பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
'எனிமி' படத்திற்கு பிறகு குறும்பட இயக்குனர் து.பா.சரவணன் இயக்கத்தில் விஷால் நடித்து வருகிறார். விஷாலின் 31வது படமாக உருவாகி வரும் இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக டிம்பிள் ஹயாதி நடித்துள்ளார். படத்திற்கு வீரமே வாகை சூடும் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் போஸ்டரில் விஷால் சிலரை அடித்து துவம்சம் செய்து மிரட்டல் பார்வையுடன் காணப்படுகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் துவங்கியது. ஒரே கட்டமாக குறுகிய காலத்திலேயே எடுத்து முடிக்கப்பட்டு, தற்போது தயாரிப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விஷால் நடிக்கும் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிக்க சுனைனா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே சமர் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடித்திருந்தார்.